December 29, 2024

தவப்புதல்வி - My first published book


மகளின் பிறந்த நாளிற்கு மூன்று மாதங்கள் முன்பு, திடீரென்று தோன்றிய எண்ணத்தால், அவளைப் பற்றி, நான் ஏற்கனவே எழுதிய பல குறிப்பு / பதிவுகளை வைத்து ஒரு புத்தகம் எழுதி, பதிப்பித்து பிறந்த நாள் பரிசாக கொடுக்கலாம்  என்று தோன்றியது. உடனே களத்தில் இறங்கினேன். சனி, ஞாயிறு மட்டுமே நேரத்தை செலவிட முடியும் என்கிற சூழல். ஆனால் அப்படி  கிடைத்த நேரத்தில், பலமணி நேரம் தொடர்ந்து எழுதினேன். 60% content ஏற்கனவே இருந்தாலும், அதையும் திருத்த, மொழி பெயர்க்க, arrange செய்ய என்று பல எழுத வேண்டியிருந்தது. 40% புதிதாய் எழுதவும் வேண்டியிருந்தது. 

என் தோழி அலமேலு சென்னையிலிருந்து proofreading -இல் மிகுந்த உதவி செய்தாள். பல முறை பகுதி பகுதியாகவும், முழுமையாகவும் draft -ஐ அனுப்பியும், அவ்வப்போதே திருத்தி அனுப்பினாள். புத்தகத்தில் எழுதப்  பல யோசனைகளையும் கொடுத்தாள். புத்தகம் பிரிண்ட் -க்கு அனுப்பும் வரை பக்க பலமாக இருந்தாள். என் மற்றொரு தோழி, குடும்ப நண்பர், சித்தா டாக்டர் நிகிலா, நான் கேட்டதும், மிகுந்த நேரமின்மை சூழ்நிலையிலும், அணிந்துரை எழுதிக் கொடுத்தார். நான் புத்தகம் எழுதுவதைப் பற்றி மிகவும் மகிழ்ந்தார். 

எழுதுவது, திருத்துவது, அட்டைப் பட வடிவமைப்பு இப்படி busy -யாக இருந்ததால், இதை முடித்து printing process -ஐ explore செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அப்படி நான் செய்திருந்தால் நேரம் இல்லாமல் போயிருக்கும். மகளின் பிறந்த நாளின் போது, புத்தகம் கையில் கிடைத்திருக்குமா என்று தெரியாது. என் அண்ணன், ஆன்மிக எழுத்தாளர் - மொழிப் பெயர்ப்பாளர் பிரசாத், அவர் வழக்கமாகப் பதிப்பிக்கும் பதிப்பகத்தை அறிமுகம் செய்ததால், உடனே வேலை நடந்தது.     

Self publishing என்று கூட சொல்ல முடியாது. Self printing என்றுதான் சொல்ல வேண்டும். முன்பக்க, பின்பக்க அட்டைகளை நானே Canva -வில் design செய்தேன். பின்பக்க அட்டையில் என் புகைப்படம் (எழுத்தாளர் -ன்னா சும்மாவா!), புத்தகத்தைப் பற்றிய சிறு synopsis, அணிந்துரை, எனது நன்றி என்று ஒரு proper எழுத்தாளரின் புத்தகத்தைப் போல பதிப்பித்தேன். விற்பனைக்காக அல்ல. ஜஸ்ட் ஒரு ஆத்ம திருப்திக்காக எழுதியது இது. மொத்தமாகவே 20 புத்தகங்கள்தான் பதிப்பித்தேன்.

"தவப்புதல்வி" என்ற தலைப்பு, என் கணவரின் பரிந்துரை. எனது விருப்பத்தில் இருந்த மற்ற புத்தக தலைப்புகள் - மனம் நிறை மகள், சுதாவின் சுந்தரி, மகளோசை, மகளதிகாரம். நண்பர்கள் - உறவினர்களுக்கு இந்த தலைப்புகளை poll வைத்து அவர்களின் விருப்பதைக் கேட்டு, முடிவு செய்தேன்.

உறவினர்கள், சில நண்பர்கள் என்று எங்கள் கூட இருந்தவர்கள்தான் இந்த புத்தகத்தை relate செய்து கொள்ள முடியும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் பிறகு புரிந்தது எல்லா அம்மாவும் இந்த புத்தகத்தோடு relate செய்து கொள்ள முடியும். யார் படித்தாலும், அவர் தங்கள் குழந்தையின் மழலை நினைவுகளை மறுபடி நினைவு படுத்திக் கொள்ள முடியும். ஏனென்றால் எல்லா குழந்தைகளும்,  தாய்மை உணர்வும் ஒன்றுதான்.  

புத்தகம் படித்து, எனக்கு ஃபோனில் அதைப் பற்றி சிலாகித்து பேசிய அனைவரும் என்னை மகிழ்வித்தார்கள். சிலர் வாட்ஸாப் மெஸேஜ்' ஆக தன் கருத்தை அனுப்பியிருந்தார்கள். எல்லாமும் மிகவும் மகிழ்வாகவே இருந்தது. ஓரிரு எதிர்மறை கருத்தும் வந்திருந்ததுதான். 

புத்தகம் கைக்கு வந்த பிறகு, சில நிகழ்வுகள் எழுத மறந்தது நினைவுக்கு வந்துது. மகளும், உறவினர்களும் கூட சிலவற்றை நினைவு படுத்தினார்கள். இப்படி பல நிகழ்வுகள் விடுபட்டு விட்டது.  

எல்லோரும் என்னிடம் கேட்டது, "மகள் படித்து என்ன சொன்னாள்?" என்பதுதான். மகள் அந்தந்த content -ற்கு ஏற்ற மாதிரி ரசித்தாள், சிரித்தாள், அவளைப் பற்றி சிலவற்றை முதல்முறை தெரிந்து கொண்டதால்  ஆச்சர்யப்பட்டாள், "என்னை கிண்டல் செய்யறியா?" என்று என்மேல் விளையாட்டாக கோபித்தாள். இப்படி நவரசங்களையும் காண்பித்தாள். ஆனால் "என்னை எவ்வளவு திட்டியிருக்க... அதப்பத்தி ஒண்ணுமே எழுதலியே" என்றாள். "ம்க்கும். நீ என்னை பத்தி புத்தகம் எழுதும்போது, அதுல எழுதிக்கோ" என்றேன். வேற என்ன சொல்லி சமாளிக்கறது சொல்லுங்க?! 

Last, but not the least, என் முதல் தோழி & என் கசின் அனிதா ஒரு கவிதையாக தன் கருத்தை எழுதித் தந்தாள். ஒவ்வொரு வார்த்தையும் exaggeration தான். ஆனாலும் இது எனக்கு மிகவும் ஸ்பெஷல்.


தவப்புதல்வி! 

---------------------

தவமிருந்து நான் பெற்ற படைப்பு!

வாசித்தேன்! மெய் மறந்தேன்!!


(சுதா) உன் தாயன்பில் என் உள்ளம் கரைந்தேன்!

தமிழின் இனிமை! தாய் பாசத்தின் பெருமை!

கண்டேன்! வியந்தேன்!!


கருவாகி உருவாகி உயிராகி 

வளர்ந்த உறவு!


உன் கனவுகள் உயிர் பெற்ற கதை!

உன் உணர்வுகள் உருப் பெற்ற நிலை!


நீ தாயுணர்வின் சிற்பி!

தமிழ்த் தாயின் தவப்புதல்வி!


எண்ணங்களை இயல்பான எழுத்துக்களாய்த் தந்த வித்தகி!

தாயன்பின் எடுத்துக் காட்டு!

அம்மா என்ற வார்த்தையின் உண்மை அர்த்தம்!


தாய்மையை அணு அணுவாய் ரசித்த ரசிகை!

தாய்மையின் மதிப்பை மற்றவர்க்கு உணர்த்திய தாரகை!        

*****

கண்மணி மானு!

----------------------------

என்னே உன் நுண்ணறிவு!

'தாயைப் போல பிள்ளை

நூலைப் போல சேலை'


வளரும் விஞ்ஞானி, மலரும் மேதாவி!

பேசும் சித்திரம், புதையலில் புதையலில் கிடைத்த ரத்தினம்!


தாய் சேய் அன்பு உரையாடல்கள்

காலத்தினால் அழியாத கல்வெட்டுகள்!


'அப்பனுக்கு பாடம் சொன்னான் சுப்பன்'

கேள்விக்கு கணைகளால் தாயை திணரச் செய்த சேய்!


அன்பு, அறிவு, அழகு 

ஒன்றாய் சேர்ந்த இறைவி நீ!


வாழ்க உங்கள் அன்பு! 

வளர்க உங்கள் உறவு!!            


- அனிதா          

December 15, 2024

July 19, 2024

வீழ்வேனென்று நினைத்தாயோ !?

தேசபக்தியும் தமிழ்ப் பற்றும் 

என் வாழ்க்கை முறையாகியிருக்க, 


உழைப்பும் விடா முயற்சியும்  

உரமாய் தினந்தோறும்  ஊக்கந்தர,

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!         


வேற்றுமையிலும் ஒற்றுமையை  

காண்பதே என் குணமாயிருக்க,


வீரமும் விவேகமும்

என் தாகம் தீர்க்கும்  

அமிர்தமாக இனிக்க,

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!   


காதலும் கனிவும் 

என்னிரு கண்ணாய் மிளிர,


பழமையும் புதுமையும்

அறிவியலும் விஞ்ஞானமும்

சரித்திரமும் சமத்துவமும்     

கடமையும் கண்ணிமையமும் 

என்னுதிரத்தில் எப்போதும் கலந்திருக்க,

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!


தடுக்கி சிலமுறை விழுந்தாலும் 

மறுபடி எழுவேன்! வெல்வேன்! வாழ்வேன்!

December 10, 2023

குளிர்காலம்


முகில் கூடிய 

மந்த வானம்.

மங்கிய ஒளியில் 

மங்கலான பகல்கள்.


அசைவிற்குக் கூட 

காற்றில்லை

ஆனால் குளிருக்கு ஒன்றும் 

குறைவில்லை.


கதிரவனையும், காற்றையும் 

காணாமல் தவிக்கும் 

பிரம்மாண்ட மலைகளுக்கு ஆதரவாய், 

இயற்கை இறங்கிவந்து

மூடுபனியைப் போர்த்தி அரவணைக்கிறது.


காயும் வெயிலும்  

பெய்யும் மழையும்  

வீசும் காற்றும் 

மக்களுக்குப் போதுமென்று, 

குளிரையும் குதூகலத்தையும்

இணைத்து இறைக்க 

இதோ வந்துவிட்டது 

கூதிர்காலம்.


#


ஏ பனியே!

நீ கனிந்து 

நுனிப்புல் மேய்வதும், 

உனது தொனியால், 

புல் குனிந்து நாணுவதும், 

நாள்தோறும் நாங்கள் கண்டு

ரசிக்கும் ரம்மியக் காட்சியாகிவிட்டது!


பச்சை மலைகளை 

பால் மலைகளாக்குகிறாய்.

பல சமயம் 

கண்ணுக்கே தெரியாதவண்ணம் 

மாயமாக்குகிறாய்.   


#


சூரியனைச் சில வாரமாக

வீரியமாய் பார்க்காத 

ஆகாயத்தின் ஆற்றாமையா? 


அதனால்     

வான்வெளி விசும்புகிறதா?  

அதுதான்  

பனித்துளியாய் பெய்கிறதா? 


அந்த வேதனைத் துளிகளா 

மனிதர்களை மகிழ்விக்கிறது?

இதுதான் இயற்கையிடமிருந்து நாம் 

கற்க வேண்டிய பாடமோ?


இல்லை இல்லை. 

இது என் க்ரூர கற்பனையாகவே 

இருக்க முடியும்.


நம்மை மகிழ்விப்பதே  

பனியின் பணியாக இருக்க வேண்டும். 

பனியும் அதன் பணியை 

மகிழ்வாகத்தான் செய்து கொண்டிருக்க வேண்டும்.


#


ஏ பனியே!

உன்னை ரசிக்கத்தானே

மொட்டை மாடியில் நான் நடக்கிறேன். 

ஆனால் என் தலைக்குள் 

நீராய் இறங்கி   

நீயும் நடக்கிறாயே!

இதென்ன போட்டியா?  


இரண்டு மாதம் தானே இருப்பாய் என 

போர்த்திக் கொண்டு தூங்காமல் 

அதிகாலையில் உன்னை ஆராதிக்க முயல்கிறேன்.

ஆனால் நீயோ என் கை விரல்களை உறைய வைக்கிறாய்.

இது நியாயமா?


தீபாவளி இனிப்புகள் காலியாக ஆக

மனதுக்குள் சங்கடம் வருமே 😆!

அதுபோல இன்னும் ஓரிரு மாதங்களில்

நீ சென்றுவிடுவாய் என்றுணர்ந்தே

காலத்தை வீணாக்காமல் 

உன்னைப் பருக பார்க்கிறேன்.

என்னைத் துன்புறுத்தாமல் 

உன்னை ரசிக்கவிடு.


#


மேகக்கூட்டமும் 

பனிமூட்டமும் 

குளிரும் 

சிலிர்ப்பும் 

இலேசான நடுக்கமும்

கூட்டும்

குளிர்காலத்தின் மீதுள்ள  

நம் காதலை!


ஏ பனிக்காலமே!

பகல்களை இன்னும் வெளிர விடு! 

பால்போல மாற்றிவிடு!  


September 16, 2023

Rocket Boys

 

The Stars, Sun, Moon, Planets, Galaxies, Black hole, Meteors, Meteroits everything was a fascination to me since my school days. Sleeping at nights in the terrace is so common in the 90s and obviously we used to stare at the stars on those occassions. Those days, I used to think that I am going to be a scientist.🙄   

Recently after the successful Chandrayaan 3 launch, the fascination got revived, and made me (all of us, of course) know more about the project. Interest started with knowing more about Chandrayaan and ended up (?!) with watching Rocket Boys. 😁

I knew about the series since its first season, but never tried to watch it. Like I said earlier, after Chandrayaan 3’s success, as my love to space science got revived, I (with my daughter) started watching the series. I have always heard of Homi Bhaba and Vikram Sarabhai, but never tried to know more about them. I wouldn’t even recognise their faces in pictures. As we were contemporaries with the legend A.P.J. Kalam, I knew (and read) about him more than the other two.

This series of two seasons is an excellent way to know more about Homi Bhaba and Vikram Sarabhai. The nuclear and space research starts in India at least a decade before our independence and so is the series.   

We were very excited to see the brilliant, the bold, the charismatic, and the swag’gy Homi and a similar, but a cool and attractive Vikram. I always believe that when such true characters and stories are being told in celluloid, then 95% of it must be true. So I really hope the real Homi be a charmer and Vikram a calmer.  

I really wonder how many years the Government took just to give permission to build a bomb. Apart from economical issue, Pandit Nehru thinks if it is ethical. He is cautious that is should not go against humanity.

I am shocked to know about how the World leaders are constantly monitoring and trying to stop us from nuclear bomb inventions. It was very thrilling to watch how we escape from their envy eyes and do the secret Pokhran test.      

In every important final stage, be it nuclear reactor test by Homi, first rocket launch by Vikram or the first nuclear bomb test by Kalaam, everything struggles at the final stage. But our scientists attempt and succeeds in them.   

We indeed feel patriotic throughout the series, but we can feel an extra ounce of proud when we hear Sir. C.V. Raman and Dr. A.P.J. Abdul kalam speak in Tamil a bit 😇. And of course, while watching the King maker, Kamarajar on screen.    

My research usually starts 😬 when I finished watching such real-life based series or movies. My curiosity to check the reality becomes high in such things 😂. You can understand my curiocity, if I say an example. Can you believe that I researched internet and tried to know if really Mahavir Singh Phogot got only "chorion"s and not "chora"s. So, I am a very strict officer in that sense 😂.

I was in awe, when I read Wikipedia about both the scientists. "How much" they have studied, researched and invented various things in Physics. Both were brilliant and patriotic fellows with unstoppable dreams and vision. It is very very unfortunate that we lost such great minds so early.

I even saw a glimpses of interviews of Vikram’s daughter and she says her dad was always cool and calm. I saw few videos of real Homi and Vikram. The conspiracy around Homi’s death is real but not proven. We have no doubt the main characters including Mrinalini. But the other characters like Crow, Pipsy, Kamla, Raza and Mathur must also be real characters. Just the percentage of reality may differ.   

Kudos to the producer and director of the series. It was indeed a story to be told on a celluloid. The actors have chosen very aptly and they have acted so well. I have always liked Jim Sarabh and I became a fan after this series. Iswak Singh is handsome. Don't miss the series. Everyone must watch it.   

January 12, 2023

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே...மெட்றாஸ் டயரீஸ்

 


"அம்மா, என்னைப் பத்திரமா அழைச்சிட்டு போய்டுவியா?" என்று இரவு தூங்கப் போகும்முன் கவலை தோய்ந்த முகத்தோடு மகள் என்னிடம் கேட்டாள். அடுத்த நாள் விடிகாலை அவளும் நானும் "மட்டும்" ரயிலில் சென்னைக்குப் போகிறோம். ஏற்கனவே சில முறை, கோவிட்'டிற்கு முன் நாங்கள் இப்படிச் சென்றிருந்தாலும் (அப்போது அவள் குழந்தை), அவளுக்கு நினைவு தெரிந்து, இதுதான் முதன்முறை. அவளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. இதுவே வேறு ஏதாவது சமயம் என்றால் "ஏண்டி என்னைப் பார்த்தா எப்பிடி தெரியுது உனக்கு? நானும் ரெண்டு டிகிரி படிச்சு கிட்டத்தட்ட 20 வருஷமா ஆபிஸ் வேலை செய்துட்டு தான் இருக்கேன். என்ன... 12 வருஷமா உனக்காகத்தான் வீட்லையே இருந்து ஆபிஸ் வேலை, வீட்டு வேலை, உனக்கு எல்லாமுமா இருந்து செய்யறேன். என்னைப் பார்த்து bla bla bla" என்று கேட்டிருப்பேன். அவளும் "போதும் மா, ஆரம்பிக்காதே" என்று கும்பிடு போட்டிருப்பா. ஆனால் இம்முறை குழந்தை நிஜமாகவே பீதியில் இருப்பதுபோல தோன்றியதால், "try பண்றேன் டி" என்று பொறுப்பாகச் சொல்லி வைத்தேன்.

அடுத்த நாள் மகள் பயந்தது போலவே நடந்தது. கர்மாவும் தன் வேலையைக் காட்டியது.

குடும்பத்தோடு எங்காவது செல்கையில், parking வசதி இல்லாத சில இடங்களில், நாங்கள் குறிப்பிட்ட இடத்தில் இறங்கிவிட, எங்கேயோ ஓரிடத்தில் car'ஐ park செய்துவிட்டு, வியர்க்க விறுவிறுக்க நடந்து வருவார் கணவர். இதனை உள்ளுக்குள் ரசித்ததுண்டு. இப்படி ரசித்ததற்குத் தான் கர்மா வேலை செய்தது என்று நினைக்கிறேன்.

ரயில் நிலையம் நெருங்க நெருங்க, traffic நிறைந்து, நாங்கள் station' ல்  இறங்கும்போது சரியாக 15 நிமிடம்தான் இருந்தது. Car'ஐ நிறுத்த இடம் இல்லாததால், நாங்களே வண்டி பார்த்து ஏற வேண்டிய சூழ்நிலை. மூன்று லக்கேஜ்'களை தள்ளிக்கொண்டும், படிகளில் தூக்கிக்கொண்டும், platform எண்ணைப் பார்த்து, வண்டியை நெருங்கினால், மர்ஃபியின் விதிப் படி, எங்கள் coach கடைசியில்தான் இருந்தது. ஓடாத குறைதான். "அம்மா, முடியலைம்மா" என்ற மகளைப் பார்த்து "இந்த காலத்து குழந்தைங்க...bla bla bla"ன்னு திட்டக் கூட முடியாம, "வந்துடுச்சி வா" என்று பக்கத்துக்கு coach' ல் ஏறி, ரயிலுக்குளேயே நடந்து, எங்கள் இருக்கையில் அமர்கையில் 3 நிமிடம் இருந்தது ரயில் புறப்பட.

 "டிங் டிங் டிங் யாத்ரீகண் க்ருபயா தியான் தேன்..." என்னும் குரலை சில வருடங்கள் கழித்துக் கேட்க ஆவலாக இருந்தேன். ஆனால் விறுவிறு என்று ஓடாத குறையாக வந்ததால், என் மூச்சு சத்தம் மட்டுமே எனக்கு கேட்டதுல, அந்த குரலை மிஸ் செய்துட்டேன்.       

Train கிளம்பிக் கொஞ்ச நேரத்துலே குறட்டை சத்தம் சொயின்...சொயின் ன்னு  கேட்க ஆரம்பித்தது. அக்கம்பக்கத்துலேர்ந்துதான் எங்கிருந்தோ வருகிறது. "என்னடா இது breakfast சாப்பிட்ட பிறகு தூங்கினா கூட பரவாயில்லயே"ன்னு எனக்குள்ள இருந்த தாய்மை கவலைப் பட்டது. கஷ்டப் பட்டு அந்த சத்தத்தைத் தவிர்க்க பார்த்தேன். ரொம்ப நேரம் கழிச்சுதான் தெரிஞ்சுது AC coach' ச்சோட sliding door சத்தம் அதுன்னு. அனாவசியமா சிலபேரைச் சந்தேகப்பட்டு, சாப்பிடாம தூங்கறாங்களேன்னு ஆதங்கப்பட்டு, emotion waste ஆனதுதான் மிச்சம்.

 Train சாப்பாடு எனக்கு ஒத்து வராதுன்னு இட்லி, தயிர் சாதம்ன்னு கட்டிட்டு போயிட்டேன். என் சாப்பாடு அவளுக்கு ஒத்து வராதுன்னு, trainல வாங்கி சாப்பிட்டா மகள். Tiffin பாதி சாப்பிட்டுட்டு, ஒரு சோறு பதம்னு train lunch வேணாமுன்னுட்டா. ஆனாலும் கட்லட் & சமோசா’க்கு ஒரு benefit of doubt கொடுத்தா. ஆனா வாரிசு & துணிவு மாதிரி ரெண்டும் அவளை ஏமாத்திடுச்சி.

 ரயில் சிநேகமெல்லாம் இப்போ இல்லைங்க. எல்லோரும் மொபைலும் air-pod’ டுமாக Busyயாக இருக்கிறார்கள். நல்ல வேளையாக அந்த கண்ணாடி ஜன்னல் screenஐ வெயிலுக்கு தேவையானாற்போல் மூடி/திறந்து விடும்போது, முன் சீட்டிலிருந்து ஒண்ணும் ஆட்சேபணை வரவில்லை. ஆனால் phone charge பண்ற switch'க்குதான் லைட்டா ஒரு உரிமைப் போராட்டம் எல்லோரிடத்திலும்.

 “AC coach’ ங்குறதால ட்ரெயினோட தடக்-தடக் சத்தமே கேக்கல” ன்னு மக கிட்ட சொன்னா "இதுல கூடவாம்மா nostalgiaவ தேடுவ"ன்னு சலிச்சிக்கிட்டா. "இந்த காலத்து குழந்தைங்க...bla bla bla"ன்னு நான் சொல்றத கேக்காம ear phone மாட்டிகிட்டு அரிஜித் சிங் பாட்டு கேட்க ஆரம்பிச்சிட்டா.

 அப்பாடா இன்னும் குறைந்தது ஒரு மணி நேரம் என்கிட்டே "சென்னை எப்ப வரும்"ன்னு கேக்கமாட்டா என்று என் மொபைலை எடுத்தேன். ஒவ்வொரு ott லையும் ஒவ்வொரு படம் டவுன்லோட் செஞ்சி வெச்சாலும், எதையுமே பார்க்க விருப்பம் இல்லாம போச்சு. சரி, தூங்கலாமுன்னு பாத்தா, இடது வலதுன்னு ரெண்டு பக்கமும், தலை சாய்ந்துக்க வசதிப்படாமல், நாமதான் நடுநிலையாச்சேன்னு திடீர்னு தோண, food tray ல சாய்ந்து கொஞ்ச நேரம் தூங்கினேன். அப்படி இப்படின்னு ஒருவழியா சென்னை போய் சேர்ந்தோம்.  

 சொந்த ஊருக்கே விருந்தாளி மாதிரி (ஒரு சோக வயலின் இசை மனசுல ஓடவிடுங்க) போயிட்டு வர்றதெல்லாம் கடினமான அனுபவம்தான். இருந்தாலும் அம்மா வீடு, உறவினர்கள், நண்பர்கள் என்று சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்க ஊரு, எங்க ஏரியா, பீச், கோயில், நான் படித்த பள்ளி, ஜன நெரிசலான கடை வீதிகள், தி நகர் platform கடைகள் என்று மகளுக்கு காட்டியதில் மகிழ்ச்சி. இருந்தாலும்  திருவல்லிக்கேணியில் நாள் முழுக்க கழிக்கும் ஆசை இந்த முறையும் நிறைவேறவில்லை. சென்னை புத்தகக் கண்காட்சி நான் அங்கு இருந்த போது இருந்திருக்கலாமேன்னு தோன்றியது. ஆக மொத்தம் ஒரு வார சென்னைப் பயணம் ஓடியே போச்சு.

திரும்பி கோவை வந்தவுடன் "உன்னை பத்திரமா கூட்டி வந்து சேர்த்துட்டேனா" என்றேன் மகளிடம். RRR ஆஸ்கார் விருது அவளுக்கே கெடச்ச மாதிரி சந்தோஷபட்டா. எங்க ஊரிலிருந்து அவ ஊருக்கு வந்துட்டாளாமாம்.

July 11, 2022

பருவமழை


கொட்டித் தீர்க்கும் கனத்த ரகம் 

இல்லையென்றாலும், 

நாள் கணக்காய் தொடர்ந்து

ஒரே சீராகப் பெய்கிறது மழை. 

 

விட்டு விட்டு மழை, 

சீரான அதன் சாரல்;     

பலத்த காற்று,  

ஓயாத அதன் ஊதல்;

மேகங்களிலும் மூடுபனியிலும் 

ஒளிந்து விளையாடும் மலைகள்;    

உறைக்கும் குளிர்;

இவற்றைக் குழைத்துத் தருகிறது

பருவமழை.


ஆடிக் காற்றோடு

சோடி சேர்ந்து 

குளிரைக் கூட்டுகிறது.


வீட்டு வேலைகள் செய்கையில்

குளிர்வதில்லை;

அலுவல் பணிக்கு அமர்கையில்

குளிர்கிறது.

நீ என்ன ஒரு பேரினவாதியா?


பால்கனி சன்னல் கதவுகளை மூடி,  

பாய்ந்து வரும் காற்றை, குளிரை

தடுக்க மனமிருப்பதில்லை. 


இம்மழை காலத்தை,  

இயல்பாக கடக்க முயல்கிறேன்.

இதமாக எதிர்கொள்ள எத்தனிக்கிறேன். 

ஆனால், 

சில்லென்ற காற்றை   

சிலிர்த்துக் கொண்டுதான்

சிலாகிக்க முடிகிறது.  


"மிகவும் சில்'லென்று இருக்கிறது, 

போதும், செல்", என்றேன். 

சட்டென 'சோ'வென்று பெய்து, என்னைப் பார்த்து

கொல்லென்று சிரிக்கிறது

மழை! பருவ மழை!!

June 19, 2022

Father's day

 My father was with me for 14 years and its been 28 years since I lost him. I have definitely been a 'Daddy's Little Princess' and a தங்கமீன்.

Dad's photo is in my living room. I see it every day. His birthday, death day and shrardha day come every year. I pass those days with a minute or two of his memories and that’s all.

But a few unexpected events remind me of my father and suddenly break me. Also of late these father's days every year. 

On one of my newly married days, we had to go to my sister-in-law’s house for a special occasion. I think my mother-in-law left a couple of days before and my husband told that he would come there at night after work. So my father-in-law and I went by bus that afternoon. It’s almost an hour and a half journey. It had been more than ten years since I had lost my father then. Traveling with my father-in-law, who was the same age and gives me the same vibe as my dad, sitting next to him reminded me of my dad. It was overwhelming for me and I silently cried throughout the journey without him noticing it.

I think I am an expert in crying silently without the persons around me noticing it. There is another incident. We travelled to Tirupati as a family seven years after my father’s demise. When we were travelling to Tirumala, while everyone in the bus was happily enjoying the nature and the hairpin bends, I was silently crying uncontrolably remembering my earlier trip to Tirupati with my father. (Dad died the next day after we had returned from Tirupati then.)

Instances like this used to happen till 10-12 years after his demise. But now it’s been 28 years since he left us and so I would think myself I got used to it. 

But a couple of months ago, my brother shared (not with me, but on his Twitter page) an excerpt from an old diary, written by Dad three years before his death. Mom & dad were on a holy trip then and that note had details about one of the days of that trip. When I read it, I couldn't control my tears.

I have only a few memories of my father but I will always cherish all of them. Happy fathers day, to my dearest dad, who will always live happy and smiling in my heart, who will always be remembered with love and respect.   

I never talked about my father anywhere because of my introvert nature. This blog is an exception though. And I’ve written a blog post தீபாவளி என்றாலே... as well. And also Manasa born on my Dad’s day

May 7, 2022

அடக்க ஒடுக்கமா இருக்குறது தப்பா பிரண்ட்ஸ்??




பதினைந்து வருடங்கள் முன்பு:

எனது திருமணத்திற்கு பிறகு, நான் காய்கறி வாங்கச் செல்கையில் (முதல் மூன்று வார்த்தைகள் இல்லாமலும் படிக்கலாம்.  காய்கறி வாங்க போறோம்னாலே கல்யாணம் ஆயிடுச்சின்னுதானே அர்த்தம்!) கடைப் பெண்மணி, நான் பேசிய பிறகு சொன்னது "ஓ, உங்களுக்கு தமிழ் தெரியுமா?". இப்படி பலர் என்னிடம் வெவ்வேறு சூழலில் கேட்டதுண்டு. "என்னங்க இப்படி கேட்டுடிங்க, அது மட்டும்தான் எனக்கு உருப்படியாத் தெரியும்" ன்னு உண்மையைச் சொல்லாமல், சிரித்து விட்டு கடந்திருக்கிறேன்.     

அதெல்லாம் ஒரு கனாக் காலம் என்பதுபோல, கடந்த ஓரிரண்டு வருடங்களாக என்னை வெளியாட்கள் பார்க்கும் பார்வையே வேறு.

கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக:

ஒருமுறை தையல் மெஷின்  ஊசி வாங்க பழைய ஊசியை (model) எடுத்துக் கொண்டு கடைக்கு போனேன். கடைக்காரர் ஊசி மாடல் பார்த்துவிட்டு "இது R மாடல். தையல் மெஷின்லியே மார்க்கர் வெச்சி Rன்னு எழுதிக்கோங்க. இங்லிஷ்ல எழுத முடிலைன்னா தமிழ்ல இப்படி எழுதிக்கோங்க" ன்னு எதையோ சொன்னார்.

இன்னொரு முறை பல் மருத்துவரிடம் சிகிச்சைக்கு போயிருந்தேன். ரிசப்ஷனில் இருந்த பெண் “இந்த formஐ, fill செஞ்சிக் கொடுங்க” என்றார். அங்கிருந்தவற்றில் ஒரு ஃபார்ம் எடுத்தேன். உடனே அவர் "அது இங்கலிஷ்ங்க. தமிழ்ல வேணும்னா இத எடுத்துக்கோங்க" என்றார்.

சிலிண்டர் கடைக்கு முகவரி மாற்ற, மகளுடன் சென்றிருந்தேன். அங்கு இருந்தவர், "ஒரு லெட்டர் எழுதணும் மா" என்று என்னிடம் சொல்லிவிட்டு, "என்ன பாப்பா, நான் சொல்றேன். நீ எழுதுரியா" என்று என் மகளைப் பார்த்து கேட்டார். அவள் என்னவென்று புரியாமல் விழிக்கவே, "நீங்க எழுதுவீங்களா?" என்றார் என்னைப் பார்த்து.

இது போல இன்னும் சிலவும் இருக்கு.

இப்படி தொடர்ந்து நமக்கு நடக்கும்போது, "எப்படி இருந்த நான்" பீலிங் தான் வருது.

Simplicity, minimalist, modest, introvert, shy, அடக்கம், ஒடுக்கம் - இதெல்லாம் கலந்த கலவையா இருக்குறதுதான் என் பிரச்சினையா? 

சொல்லுங்க பிரெண்ட்ஸ் சொல்லுங்க!! 

April 30, 2022

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார், நாற்பதாகிப் பார்!


நாற்பதாகிப் பார்!


உடல் விரைந்து சோர்வடையும்

பூனை தூக்கம் தேவையென்றாகும்

வீட்டு வேலைகள் மலைப்பளிக்கும்

உடல் உறுப்புகள் பல்லிளிக்கும்.


கரும்புள்ளி, கருவட்டம்

நரைமுடி, முடிஉதிர்வு

உடல் எடை, தொந்தி

சாளேஸ்வரம், நாய்குணம்

என அனைத்தும் அதிகரிக்கும்.


மாதம் விடாமல் படுத்தும்

மாதவிடாய் தொந்தரவுகள்.

பத்து நாட்களுக்குப் படுத்தும்

PMS பிரச்சினைகள். 


குளியலறைப் பயணங்கள் அதிகரிக்கும்

காலைக்கடனும் ஒரு வேலையாகும்.


உப்பு, கார்பு, சர்க்கரையோடு

உணவின் அளவையும்,

மூச்சு, நடை பயிற்சிகளோடு

தொப்பையின் அளவையும்

குறைக்க முயல்வோம்.


பிறருக்கு ஆலோசனை, ஆறுதல்

சொன்ன காலம் போய்

நாம் யோசிக்க, புலம்ப

ஆரம்பித்திருப்போம்.


Alarm அல்ல; 

தேவைப்படுவது Reminders தான்.


பாதி தூக்கத்தில் விழிப்பு தட்டிவிட்டால்

இரவின் நீளத்தையும்

கடிகாரத்தின் சோம்பலையும்

நம் நினைவாற்றலின் எல்லையையும்

உணர்ந்து வியக்கலாம்.


பாதி அல்லது முக்கால் கிணற்றை தாண்டியாயிற்று.

சிலமுறை விடுதலைக்காகவும்

சிலமுறை  கடமையாற்றவும்

மாறி மாறி விரும்புகிறது மனது.


Aunty என்றழைக்கப்படுவது எங்களுக்கு

பிரச்சனையே இல்லை.

சக aunty களாலும் அப்படி

அழைக்கப் படுவதுதான் துயரம்.


எங்களுக்குள் இருக்கும் புகைப்பட அசுரன் விழிப்பான்

பூ பறவை, காற்று ஊற்று, மலை மழை, கோலம் மேளம் என்று

எதையும் விடாமல் எதற்காகவோ படம் பிடிப்போம்.


ஆனாலும் நம் சொந்த அகன்ற தாடைக்கு பயந்து,

Selfieயைத் தவிர்ப்போம். 

பிறர் நம்மை படம் பிடிக்கும்வரை, 

மூச்சை நன்கு இழுத்துப் பிடிப்போம்.


இத்தனை இருந்தாலும்,


நிறைய கற்(றிருப்)போம்

துணிவு கூடும்

தெளிவு பிறக்கும்

ரசனை மேம்படும்

Priorities புரியும்

பற்றின்மையின் மேல் பற்று வரும்

தேவைகள் குறையும்

தனிமை இனிமையாகும்


You'd have learned to

accept,

be resiliant and

ignore judgements of others. 

So you can rock in your own way!


அதற்காகவாவது நாற்பது+ வயதாகிப் பாருங்கள்!

April 25, 2022

Tired of Women’s & Mothers day online celebrations

Last month we had Women’s day. Next month we have Mother’s day. Surprisingly the hashtag “MothersDay” started trending two weeks before the actual day. 

Hello World, don’t annoy us with such celebrations to glorify us as Women & Mothers just to extract more of our energy in the name of responsibilities. Apparently, I just cannot tolerate those over-hyped (praising women) quotes or images that get forwarded on such “special days” on every social media. Don’t con us so easily. At least put out some effort to do it, if you really want to deceive us.


It's like hitting two cats with one stone if women are fascinated with tasks related to homemaking such as cooking, cleaning etc. If she has other (non-homemaking) passions, she will undoubtedly find it difficult to devote time to or find opportunities for. 

Work from home has become common these days. Be it to manage kids or if we receive guests at home, definitely it is us, who has to compromise on the WFH job, because there is no other option. Of course, as this is not happening on a daily basis, it is fine. 

Fellow ladies, have you ever heard any of the following from others?  

Wow, how do you constantly trying new things in the kitchen? 

How do you manage to cook deliciously  everytime? 

It’s amazing how you maintain the place clean. 

How do you keep your bathroom so tidy? I know you don’t have a helper or maid.

How do you balance your home office (or a day job) and home both well?

Don’t fall for these words. They are not said to make you feel happy or proud, but to make you work even harder. Let us try not to ask such questions to fellow ladies who manage to do all the household just because she has no choice.

If no one cooks for you, even when you are tired or sick, then don’t force yourself to cook something special every time. Allow your health, energy, free time, and mood to make the cooking decisions. The same goes with cleaning, laundry, or any household work. We are not entitled alone to all of this. We should realise this in the first place, then later if we are lucky, we can involve others in the family and share duties. I am sure all of us cannot be lucky. So don’t strain yourself. No one is going to give you an award or reward for the dedication or hard work that is forced on you and of course, certainly, you don’t need them either.   

Do I really not enjoy these special days? Of course, I do. That’s just because I get to chat with my dear friends, share green memories etc, which is something I don't get to do on a regular basis.

So happy Mother's day in advance, ladies! (winking smiley)  

November 20, 2021

I am a harmless fake id on social medias



சமூக வலைதளங்களில் Fake id அல்லது முகம் / அடையாளம் மறைக்கும் மக்கள் சிலபேருக்கு திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல சம்பவம் சிலசமயம் நடந்து விடுகிறது. அப்படி எனக்கு நடந்த சம்பவங்கள் இவை.


சம்பவம் 1, 1a, 1b etc:

பல தமிழ் எழுத்தாளர்களை FBல் பின் தொடர் கிறேன். அவர்கள் சில சமயம் சுவாரஸ்ய போட்டிகள் வைக்கிறார்கள். அல்லது அவர்களின் நூல்களின் வாசித்தால், விமர்சனம் எழுதி அவர்களுக்கு அனுப்பத் தோணும். நான் அடையாளம் மறைத்தே இருந்தாலும் சமூகத் தளங்களில் அவர்களை அணுக ஒரு தயக்கம் இருக்கும். மிகச் சிலமுறை ஓரிரு எழுத்தாளர்களுக்கு ஈமெயிலில் புத்தக விமர்சனம், போட்டிகளில் பங்கேற்பு என அனுப்பியுள்ளேன். அவர்களும் ஓரிரு முறை, என் ஈமெயில் ஐடியை மறைத்து, அவர்களின் FB பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். அதையும் மூச்சு காட்டாமல் ஒளிந்தே பார்ப்பேன். "மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன"ன்னு அந்த FB post என்னைப் பார்த்து கேக்குறா மாதிரியே இருக்கும்.


சம்பவம் 2:

சென்ற வருடம் எனது கிட்டத்தட்ட 10 கதை / கட்டுரைகள் விகடன் தளத்தில் வந்த போதும், விகடன் அவற்றை தன் FB பக்கத்தில் ஒவ்வொரு முறையும் வெளியிட்டிருந்த போதும், நான் அதை ஒரு முறை கூட என் FBல் ஷேர் செய்யவில்லை. FBல் எல்லா பக்க உறவினர்களும், நண்பர்களும் என் நட்பில் உள்ளார்களே என்ற தயக்கம்தான் காரணம். "மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்தது இல்லை, நானாக எழுதியது தான்" என்றாலுமே ஒரு தயக்கம்.


சம்பவம் 3:

சென்ற வருடம் எழுத்து பயிற்சி கூகிள் மீட் ஒன்றை எழுத்தாளர் பா ராகவன் அவர்கள் நடத்தினார்கள். இப்போது நடப்பது தொடர் வகுப்புகள் என்று நினைக்கிறேன். ஆனால் அப்போது ஒரே ஒரு செஷன் நடந்தது அவ்வளவுதான். அதுதான் நான் பங்கேற்ற முதல் மற்றும் கடைசி சமூக சந்திப்பு. அதிலும் வீடியோவை அணைத்து, பெயரை மாற்றிக் கலந்து கொண்டேன்.    

கொஞ்சம் interactiveவாகத்தான் வகுப்பு சென்றது. No surprise, I was a silent spectator. பாரா அவர்கள் "யார் எழுத விருப்பப் படுவார்கள் அல்லது யார் எழுதுவார்கள்" என்ற பொருள் வரும்படி ஒரு கேள்வியைக் கேட்டார். பங்கு கொண்ட சில பேர் அவர்களுக்கு தோணியதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். எப்பவும்போல எனக்குத் தயக்கம். ஓரிரு வினாடிகள் யாரும் பேசாமல் அமைதியானபோது நான் அன்மியூட் செய்துகொண்டு "Introverts எழுதுவதை prefer செய்வார்கள்" என்று "எனக்கு" செட் ஆகிறதைச் சொன்னேன்.         

சட்டென்று பாரா அவர்கள் "ஆங், இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன். யாரு சொன்னது?" என்றதும், "ஜனனி" என்று நான் “கொடுத்த” பெயரைச் சொன்னேன். "நான் எதிர்பார்த்த பதில் இதுதான். யாரு சொன்னதுன்னு கொஞ்சம் வீடியோ ஆன் செஞ்சி பேசுறிங்களா ம்மா, உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னா" என்று வினவியதும், ஐயையோ, என்னடா செய்யறதுன்னு கொஞ்சம் தயக்கப் பட்டு சில வினாடிகளுக்கு வீடியோ ஆன் செய்து, பாரா அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, அவர் வகுப்பை மேற்கொண்டு தொடர்ந்த போது, வீடியோவை நிறுத்திக் கொண்டேன்.

பள்ளி தினங்களில் ஆசிரியர்கள் கேட்ட கேள்விக்குச் சரியான பதில் அளித்து, அவர்களிடம் பாராட்டு வாங்கிய தருணங்கள்தான் நினைவு வந்தது. சிறிய அங்கீகாரம் கிடைத்தாலும், ஃபேக் ஐடியா வாங்கிக்கறோமேன்னு தோணும். இந்த முறை, முகத்தைத் தெரியப் படுத்தினாலும், பேரை மாற்றிக் கொடுத்திருந்தேன். அப்பவும் ஃபேக் ஐடி ஃபீலிங்தான்.

நாம என்ன வீடியோவையா ஆன் செய்யப் போறோம்னு nightyல தான் அந்த கிளாஸ் attend செய்தேன். எதிர்பாராம வீடியோ ஆன் செய்ய வேண்டியதா ஆயிட்டதால, முகத்தை மட்டும் காட்டுமளவுக்கு கேமரா அருகில் சென்று எல்லோரையும் பயமுறுத்தியது தனி விஷயம்.    

இந்த முகத்தை / அடையாளத்தை காட்டும் தயக்கம் இப்போ இல்லேங்க, தலைவர் ஸ்டைலில் சொல்லனும்னா, "அது கூடவே பொறந்தது, போகவே போகாது". (சரி சரி சலிச்சுக்காதிங்க. மேலே படிங்க.) அவ்வளவு பழசு அந்த தயக்கப் பழக்கம்.


சம்பவம் 4:

சுமார் பதினைந்து வருடத்திற்கு முன்பு நடந்தவை இவை. Ear phone மாட்டிக் கொண்டு, பஸ்ஸில் ஆபிஸ்க்கு போக வர FM கேட்டுக் கொண்டே கழிந்த பசுமையான வருடங்கள் அவை. FMல் பல போட்டிகளுக்கு SMSல் பங்கேற்றால் போதுமானது. பலமுறை அப்படி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அனுப்பியுள்ளேன். அந்த நிகழ்ச்சி முடியும்போதே வெற்றியாளர்களை அறிவித்து விடுவார்கள். "அண்ணாமலை படத்தில் ரஜினியின் பெயர் என்ன?" என்பது போல கடினமான கேள்விகள் அவை. அப்படி ஒரு கடினமான போட்டியில் நான் ஒரே ஒரு முறை (இரண்டு சினிமா டிக்கெட்) வெற்றி பெற்றேன். நிகழ்ச்சியில் என் பெயரை அறிவித்து, நிகழ்ச்சி முடிந்ததும், அந்த RJவே ஃபோன் செய்தார். இப்படி ஒரு callஐ எதிர்பார்த்திராத நான் ஐயையோ என்னடா இதுன்னு பேசி வைத்தேன். அந்த சினிமா டிக்கெட் என் கைக்குக் கிடைக்கவில்லை என்பது தனி விஷயம்.


சம்பவம் 4a:

இன்னொரு முறை, சூரியன் FMல் (என்று நினைவு) நடிகர் நாகேஷ் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. நான் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்த நான் சும்மா இல்லாமல், "எனது அப்பாவும், நாகேஷும் நண்பர்கள்" என்று SMS அனுப்பினேன்.

உடனே என்னை ஃபோனில் அழைத்து விட்டார்கள் அந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த ரெண்டு RJக்களும். "இப்போ பிரேக் முடிஞ்சி நிகழ்ச்சி தொடங்கும்போது, உங்க அப்பாவிற்கும், நாகேஷ் சாருக்கும் நடந்த ஏதாவது ஒரு நிகழ்வு பற்றிச் சொல்ல முடியுமா" னு கேட்டார்கள். ஐயையோ என்னடா செய்யறதுன்னு யோசிச்சு, சரி சொல்லுவோம்னு கீழேயுள்ள நிகழ்வைச் சொன்னேன்.

“நடிகர்கள் நாகேஷ், ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தரராஜன் இவர்களுடன் எனது அப்பாவும் திருவல்லிக்கேணியில் ஒரே மேன்க்ஷனில் தங்கியிருந்தார்களாம். இவர்கள் எல்லோருக்குமே, அவர்களது careerரின் ஆரம்ப நாட்கள் அவை. என் அப்பாவிற்கு சினிமா career இல்லை என்றாலும் இவர்களுக்குள் ஓரளவு நட்பு இருந்திருக்கும் போல. அதனால்தான், பல வருடங்கள் கழித்து திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் இருக்கும் அம்மன் கோயில் அருகில், நடந்து போய்க்கொண்டிருந்திருக்கும் எனது அப்பாவை பார்த்த நாகேஷ் அவர்கள், வண்டியிலிருந்து இறங்கி, ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளார். அதற்குள் அங்கு ஒரு சிறு கூட்டம் கூடவே, என் தந்தை சங்கோஜப்பட்டு நழுவி வந்து விட்டிருக்கிறார்.”

இது முகமறியா அடையாளம்ங்குறதால எப்படியோ சொல்லி முடிச்சிட்டேன்.

அவ்ளோதான்!

இப்படி என்னை அடையாளம் காட்டும் எதனிடமிருந்தும் ஒரு தயக்கம். இப்படியே இருந்தா நாளப்பின்ன எனக்கு ஒரு அவார்ட் கொடுத்தாங்கன்னா, அதை எப்படிப் போய் மேடை ஏறி தயக்கமில்லாம வாங்குறதுங்குறதுதான் என்னோட கவலை எல்லாம். என்ன செய்யறது சொல்லுங்க பிரண்ட்ஸ்?!

Update after a couple of days of posting this by tagging PaRa sir. He has posted this on his FB and as usual, I was checking it with anonymous mask.




September 8, 2021

மருதமலை மாமணியே !!

 “காற்றின் மொழி”யை ரசித்து எழுதி விட்டேன்

https://sudhazscribbles.blogspot.com/2021/07/blog-post.html

https://www.vikatan.com/oddities/miscellaneous/love-for-balcony-breeze

"நான் சொல்லும் நேரத்தில் மழை நின்று போகட்டும்" என்று மழையுடனும் உரையாடி விட்டேன்

https://www.vikatan.com/oddities/miscellaneous/conversation-between-woman-and-rain-readers-imagination

இப்போது மலைகளுக்கான நேரம்.



பிரமாண்டமான அடுக்கடுக்கான பர்வதங்களின்

பிரதான மையத்தில் வீற்றிருக்கும்

மருதமலை முருகன் கோவில் ஒரு ஆச்சர்யம்.

விலை மதிப்பில்லாத அரிய கல் பதிந்திருக்கும்

மன்னனின் கிரீடத்தை ஒத்திருக்கும் காட்சி அது.

 

பார்த்தவுடன் மட்டும் அல்ல,

எங்கள் வீட்டு பால்கனியிலிருந்தும்

சன்னல்களிலிருந்தும்

மொட்டை மாடியிலிருந்தும்

தினம் தினம்

பார்க்கப் பார்க்க

இன்னும் இன்னும்

பிடித்துக் கொண்டேதான் போகிறது.

 

மேகங்கள் மூடியும் 

பனி படர்ந்தும்

மழையில் நனைந்தும்

வெயில் பட்டும்

கண்டது மட்டுமல்லாது            

வெயிலும் நிழலும்

பட்டை பட்டையாய்

ஆங்காங்கே

மாறி மாறி

இருப்பதையும் வியந்து களித்தாயிற்று.

 

நழுவித் தவழும் மேகங்களை

தடுத்து நிறுத்தி குளிர்வித்து

தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு மட்டும்

கூடுதல் மழையை பெற்றுத் தந்து இதம் சேர்க்கிறாய்.

  

விடிகாலை காபி உன்னை கண்ணால் பருகிக்கொண்டு,  

மாலை நடை உனது மேற்பார்வையில்,

சமையலும் வீட்டு வேலைகளும் உன்னுடன் பேசிக்கொண்டு

என்று வெகு சீக்கிரம் என் தோழியாகிவிட்டாய்! 


ஒரு நொடி  தூரல், மறு நொடி வெயில்

ஒரு கணம் பேய்க் காற்று, மறு கணம் அடை மழையென

வானிலை அடிக்கடி மாறுவது 

உன்னை நான் வியந்து பார்த்துக்கொண்டே இருக்க

இயற்கை எனக்கு காட்டும் சமிக்கையோ!


இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவை இல்லை!

July 22, 2021

காற்றின் மொழி!


வாயாடி

நாள் கணக்கில்

வேளை தவறாமல்

ஓய்வில்லாமல்

ஊதலடிக்கிறாயே!

உனக்கு வாய் வலிக்கவில்லையா?!


மகள்

விறைப்பான தென்னை மரங்களையே

வீரிய உன் விசையால் அசைத்து விடுகிறாய்.

தென்னை மரங்களும் தளர்ந்து, தன்னை மறந்து

தந்தை தன் மகளிடம் பேசும் குதூகலத்தோடு

தலையை ஆட்டி ஆட்டி உன்னோடு பேசுகிறது.


தோழி

பெண்களின் அடர்ந்த கூந்தலை ஒத்த

இலை கிளைகளையுடைய வேப்ப மரங்களோடு

நீ சேரும்போது

உயிர்த் தோழிகள் இருவர் கலகலப்பாக

பேசி சிரித்து மகிழ்வது போல தோன்றுமெனக்கு.


குறும்பா

ஓயாமல் வீசி மனதை வருடும் உன்னை

உடலால் உணர

சன்னல் கதவுகளைத் திறந்து வைத்தால்,

ஓடியாடி நீ விளையாட

உன் சகாக்கள் தூசு, குப்பைகளுடன்

வந்து விடுகிறாயே!

இது நியாயமா?!

April 24, 2021

Comments received on Vikatan for the short story

The first short story that I wrote is at here - காண்பதெல்லாம் காதலா டி?!

And this was published on Online Vikatan magazine at here - https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-about-mother-daughter-love-my-vikatan

I received some genuine comments from readers, who are unknown to me, they must be Vikatan readers. And I am so surprised and glad that my empathy and imagination with which I wrote the story has touched many souls.

Happyyyyy!


நிலா - கவிதை


சமையலறை சன்னலில் 
எட்டிப் பார்த்து 
"என்ன சமைக்கிறாய்?" என்றது.
சந்திரகலா செய்யப் 
போகிறேன் என்றேன்.
அடுத்த நொடி மேகங்களில் 
ஓடி ஒளிந்தது. 
😂😃

February 10, 2021

The books I liked

எனக்கு பிடித்த புத்தகங்கள்: 

I might have missed some books, though I referred Kindle history to prepare this list. This is not my entire reads list, but my favorites list. They are almost in the order I read - the recent ones on the top. I will try to update the list.


நினைத்தால் நிம்மதி - தென்கச்சி கோ சுவாமிநாதன் 

பசி - நட் ஹாம்சன் - மொழிபெயர்ப்பு: க நா சு

ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள் – மொழிபெயர்ப்பு சுப்புராய நாயகர்

Short Stories - Tolstoy

வேடிக்கை பார்ப்பவன் - நா. முத்துக்குமார்

Almost all Sujatha books available on Kindle Unlimited

ஜெயமோகன் குறுநாவல்கள்

பனி மனிதன் – ஜெயமோகன்

வெட்டாட்டம் - ஷான் கருப்புசாமி

அஞ்ஞாடி - பூமணி (halfway through)

அறம் – ஜெயமோகன்கைப்பிடி அளவு கடல் - பிரமிள்

போக புத்தகம் - போகன் சங்கர்

ஒரு சிறு இசை - வண்ணதாசன் (halfway through)

கிமுகிபி - மதன்

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்

ஜெயமோகன் சிறுகதைகள்

ஜெயகாந்தன் சிறுகதைகள்

ஆப்பிளுக்கு முன் - சி. சரவணகார்த்திகேயன்

புதுமைப் பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்

My Life: An Illustrated Biography - Abdul Kalam


February 5, 2021

தாமதமான தன்னுணர்வேற்றங்கள்

குறிப்பு: தன்னுணர்வேற்றம் என்றால் ஆங்கிலத்தில் Empathy.

                  

தாமதமான தன்னுணர்வேற்றம் - #1

ஒரு வருடத்திற்கு முன்பு 

எனது மாமி.

ஆறு மாதத்திற்கு முன்பு 

ஒன்று விட்ட சித்தி. 

ஒரு மாதத்திற்கு முன்பு

தூரத்து அண்ணி. 


என் அம்மாவிற்கு இவர்கள்

வாரந்தோறும் தொலைபேசும் 

திடீர் தோழிகளானார்கள்.


மூத்த கைம்பெண்ணான 

என் அம்மா புதியவர்களான 

அவர்களுக்கு ஆறுதல்.


தாமதமான தன்னுணர்வேற்றம் - #2

தன் பதின்ம வயதில் 

பெற்றோரின் சம்மதமின்றி 

அவர்களை தவிக்க விட்டு   

காதல் மணம் செய்த

தோழியை வெறுத்தேன்.


ஆண்டுகள் பல கழிந்த

பின் தான் புரிந்தது

முக்கியமானது மகிழ்ச்சியான 

மண வாழ்க்கை தான் 

அதைத் தந்தது 

காதலா பெற்றோரா என்பதல்ல.

January 2, 2021

காண்பதெல்லாம் காதலா டி?!

அன்பே!

என் நினைவுகளில் நீ

என் கனவுகளிலும் நீ!

நான் சமைக்கும் சமையலில் நீ

நான் பேசும் பேச்சிலும் நீ!

என் நடையில் நீ    

என் உடையிலும் நீ!

நான் முகம் பார்க்கும் கண்ணாடியும்,

என்னை விட்டு உன்னைத்தான் காட்டுகிறது!!

♡♡♡♡♡ ஸ்ரீலக்ஷ்மி விஷ்ணுவர்த்தன் ♡♡♡♡♡


என்ற என் மகள் எழுதிய காதல் கவிதை முதல்முறையாக விகடன் தளத்தில் பிரசுரமாகியிருந்தது. அவளுக்கு கவிதை / கட்டுரை எல்லாம் எழுத வரும் என்பதே, அவள் தன் காதல் கணவனை கை பிடித்த பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது.

வாட்ஸப்பில் லிங்க் அனுப்பி, இப்போதுதான் அலை பேசினாள். மாப்பிள்ளை வேலை விஷயமாக வெளியூர் போவதால், வார இறுதியில் இங்கு வருகிறாளாம். எனக்கு சட்டென்று வாழ்க்கை சுறுசுறுப்பானதைப் போல இருந்தது.

என் கணவர் எங்கள் இருவரது அலைபேசியிலும், வாட்ஸப் ஸ்டேட்டஸாக, அவள் கவிதை லிங்க்'ஐ வைத்து விட்டு, "அவளுக்கு திரட்டிப் பால் ரொம்ப பிடிக்குமே, அதை செஞ்சிடு. அப்படியே அந்த ரிப்பன் பக்கோடாவும் செஞ்சிடு. இந்த முறையாவது "யாரி"க்கு அவளை அழைச்சிட்டு போகணும். அவ கணவருக்கு நார்த்-இந்தியன் உணவு பிடிக்காதுன்னு, போன முறை வந்தப்போ வேணாம்னுட்டா. சுகன்யாகிட்ட சொல்லிடு. பள்ளித் தோழிகள்… என்னவோ சொல்லுவாங்களே… ஆங்... பெஸ்டீஸ்... பெஸ்டீஸ் ரெண்டு பேரும் எங்கயாவது வெளிய போணும்னா போயிட்டு வரட்டும்" என்று அடுக்கிக்கொண்டே இருந்தார். தன் தம்பியின் ஃபோன் வரவே "ஆமாண்டா, கவிதை படிச்சியா? எப்பிடி இருந்தது? அவ ஒரு ப்ளாக் ஆரம்பிச்சாளே, அது தெரியுமில்ல? இன்னும் நிறைய எழுதுறா அதுல…" என்று பேசிக்கொண்டே மாடிக்கு சென்று விட்டார்.

நான் என் மகளின் நினைவுகளில் மூழ்கினேன். ஒரே மகள். செல்லமாய் வளர்த்தோம். எல்லாமே அவள் விருப்பம்தான். படிப்பு, பாட்டு, சமையல், வீணை, கை வேலைகள்ன்னு எல்லாத்துலயும் சுட்டி. படிப்பு முடிந்து சென்னையில் வேலை கிடைக்க, "கோவைல வாழ்ந்தவங்களுக்கு வேறு எங்கும், முக்கியமா சென்னை, செட் ஆகாது" ன்னு (இங்க வழக்கமா எல்லோரும் சொல்லுறதை) சொல்லிப் பார்த்தோம். ஆனா அவ அடம் பிடித்து, பெண்கள் விடுதியில் தங்கி இரண்டு வருடம் சென்னையில் வேலை பார்த்தாள்.

ஊர் புதியது. வேலை புதியது. மக்கள் புதியவர்கள். ஆனால் இந்த தலைமுறை குழந்தைகள் சாமார்த்தியமானவர்கள். அதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள். என் மகளும் எல்லாவற்றையும் பழக்கிக் கொண்டாள், கற்றுக் கொண்டாள். எங்களுக்கும் பெருமையாக இருந்தது.      

கூட வேலை பார்க்கும் விஷ்ணுவர்த்தன் -ஐ, இரு வீட்டு சம்மததத்துடன் காதல் திருமணம் செய்தாள். விஷ்ணு, நல்ல பிள்ளை. என் மகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார்.        

திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு, விஷ்ணுவிற்கு பெங்களூரில் வேறு வேலை கிடைத்து விட்டதில், இவள் தன் கேரியர்'ஐ நினைத்து முதலில் சிறிது ஏமாற்றமடைந்தாள். திருமணத்திற்கு பிறகு பெங்களூரிலேயே வேறு வேலை பார்த்துக்கலாம்னு விஷ்ணு சொன்னதும் சமாதானமடைந்தாள். சொன்னாமாதிரியே பின்பு ஒரு வேலையும் கிடைத்தது. ஆனால் "சனிக்கிழமை எனக்கு வேலை உண்டு, அவருக்கு விடுமுறை. வெளியே எங்கயாவது போணும்னா முடியலை மா. அதனால வேலைய விட்டுட்டேன்" என்றாள் தொலைபேசியில்.

பொழுது போவதற்காகத்தான் ஒரு ப்ளாக் ஆரம்பித்து, கட்டுரை, கவிதைன்னு எழுத ஆரம்பித்தாள். வித விதமாக சமையல் செய்வாள். வார இறுதி ஆச்சுன்னா போதும், ரிசார்ட், சினிமா இல்ல வேற எங்கயாவது போய்விடுவார்கள். எல்லா போட்டாவையும் அனுப்புவாள். "காதல் மணம், அன்பான கணவர், தனிக்குடித்தனம், வாரா வாரம் எங்காவது ஒரு ட்ரிப் என்று கனவு வாழ்க்கையைத்தான் வாழ்கிறாள் மகள்" என்று அவ்வப்போது இவர் சொல்லி மகிழ்வார்.     

வார இறுதியும் வந்தது. மகளும் வந்தாள். திருமணத்திற்கு பிறகு, முதன்முறையாக தனியாக வந்துள்ளாள். "அம்மா இந்த முறை நாந்தான் எல்லாம் சமைக்க போறேன். உனக்கு ரெஸ்ட். அப்பா, பேங்க், போஸ்ட் ஆபிஸ் வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க, நாளைக்கு போவோம்" என்றாள். திருமணத்திற்கு பிறகு பொறுப்பு இன்னும் கூடி இருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.

இரவு சாப்பிட்ட பிறகு, அவர் சற்று வெளியே செல்கிறேன் என்று கிளம்பி விட, நான் மறுநாளுக்காக கீரை ஆய உட்கார்ந்தேன். மகளும் அவள் கணவரிடம் தொலைபேசி விட்டு வந்தவள், "இதெல்லாம் நாளைக்கி செஞ்சிக்கலாம் விடு. கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கறேன்" என்று  படுத்தாள்.

நான் அவள் தலையை கோதியபடி மெதுவாக "எல்லாருக்கும் ரொமான்டிக்'கா தெரியுற கவிதை, எனக்கு மட்டும் வேற மாதிரி தெரியுதே டா!" என்றேன். 

"என்ன மா சொல்ற?" லேசாக அதிர்ந்து என்னை பார்த்தாள்.

"ஆமாண்டி. எனக்கு என்னமோ எல்லா விஷயத்திலும் டாமினேட் செய்யும் கணவரைப்பத்திதான் அந்த கவிதையோன்னு தோணிச்சு.” அவள் அமைதியாய் இருக்கவே நான் தொடர்ந்தேன். “தினமும் எங்க கிட்ட பேசறியே தவிர, அதுல முன்னமாதிரி ஒரு லைவ்லிநெஸ் இல்ல. நீ டிரஸ் செய்யும் விஷயத்தில் நிறைய மாற்றங்கள். இந்தியன் தவிர வேற எந்த க்யுசினும் உனக்கு பிடிக்காது. ஆனா வாரா வாரம் நீங்க வெளிய போகும்போது, மாப்பிள்ளைக்கு பிடிச்சதுதான் சாப்பிடுவிங்க போல! போட்டோல பாக்கும்போது தெரிஞ்சிக்கிட்டேன். ஏதோ ஒரு காரணம் சொல்லி வேலைக்கு போக மாட்டேங்குற, இல்ல வேலை தேட மாட்டேங்குற. மாப்பிள்ளை கூட இருக்கும்போது, உன் இயல்புலையே நீ இருக்க மாட்டேங்குற. சுகன்யாவும் சொன்னா. முன்ன மாதிரி நீ வாட்ஸப் குரூப்ல சாட் செய்யுறதில்லைன்னு. என்னடா ஆச்சு உனக்கு?".

சில நொடிகள் அதிர்ச்சியான மௌனத்திற்கு பின், “அம்மா” என்று கேவி என் மடியில் அழத் தொடங்கினாள்.

December 19, 2020

Celebrating the bond of best friends!

This post is about my friends.      

One of my best friends is the reason why I'm writing this post. She informed me a few days ago that she reads my articles and blogs in the hopes that I have something to say about her or our group of friends. I was like “Naan avlo ellam worth illai di” and “Innuma nammala indha ulagam nambudhu!”. To be honest, I was thrilled to hear that. And that's what inspired me to write this post about my friends.

My earliest memory of a friend is when I was in pre-KG. The teacher asked us to stand in a horizontal line. My (then a few days old) friend was two kids away from me. So I quietly went and stood beside her and got a cuff on my head from the teacher 😐. Apparently the teacher must have made us stand in height order (so I was the first one in the queue 😂), and I had no idea about it. The girl I went and stood beside is still my close friend. Our friendship grew along with us. 

Cousins are our first friends. That way, I have a very special one. We used to write letters to each other as kids and we couldn't wait for the holidays to meet. But whenever we did meet, we would always have a gala time. We still cherish those memories whenever we talk.

I think 80s kids are the last generation to lose their contacts with friends, as those were landline days. I too lost contact my college besties contacts for a few years. But thanks to FB and a common friend, I found them again. There are four of us and since then we are in constant touch with each other. Our audio calls last atleast 45 mins and our next group video call is still pending. 

My ex-colleagues are another close friends, a group of four. We try to meet at least once a year. Even if we get only a few hours when we meet, we never miss a second without talking & laughing. Last summer we had planned a get-together, but corona overrode everything. I hope our plan works out next year.

The beauty of friendships is that we can resume with them at any time, no matter how many years have passed. Sometimes, after a long time, I ping a friend, or they ping me unexpectedly. And we simply pick up where we left off in our conversation. Moments like those are priceless. 😇

Some of the good friendships start with neighbors. I have such a few in Chennai & here as well, including my daughter’s friend’s mothers. The beauty of neighbors is they become family friends. They are my daily dose of energy as we are in touch, everyday or every other day.  

The best conversations with years-old friendships are filled with “appollam naama...”, “hey, do you remember?”, “oh is it? I totally forgot”, “wow, those were the best days” and a lot of smiles & laughter. And whatsapp chats are the best, only with friends. They rarely happen, but when they do, they are never short, they go on for hours.   


I am an introvert by nature, but an extrovert among friends. Looking back, I have had wonderful friends in every phase of my life. As I have just finished my thirties, I have quite a few friendships that are a few decades older, and they are precious indeed.       

Friends,
They understand.
They encourage.
They appreciate.
They advise.
But more than anything—they listen.
They laugh with you…and sometimes, at you 😂.

East or West. 

Women-to-Women friendships are the best.