September 8, 2021

மருதமலை மாமணியே !!

 “காற்றின் மொழி”யை ரசித்து எழுதி விட்டேன்

https://sudhazscribbles.blogspot.com/2021/07/blog-post.html

https://www.vikatan.com/oddities/miscellaneous/love-for-balcony-breeze

"நான் சொல்லும் நேரத்தில் மழை நின்று போகட்டும்" என்று மழையுடனும் உரையாடி விட்டேன்

https://www.vikatan.com/oddities/miscellaneous/conversation-between-woman-and-rain-readers-imagination

இப்போது மலைகளுக்கான நேரம்.



பிரமாண்டமான அடுக்கடுக்கான பர்வதங்களின்

பிரதான மையத்தில் வீற்றிருக்கும்

மருதமலை முருகன் கோவில் ஒரு ஆச்சர்யம்.

விலை மதிப்பில்லாத அரிய கல் பதிந்திருக்கும்

மன்னனின் கிரீடத்தை ஒத்திருக்கும் காட்சி அது.

 

பார்த்தவுடன் மட்டும் அல்ல,

எங்கள் வீட்டு பால்கனியிலிருந்தும்

சன்னல்களிலிருந்தும்

மொட்டை மாடியிலிருந்தும்

தினம் தினம்

பார்க்கப் பார்க்க

இன்னும் இன்னும்

பிடித்துக் கொண்டேதான் போகிறது.

 

மேகங்கள் மூடியும் 

பனி படர்ந்தும்

மழையில் நனைந்தும்

வெயில் பட்டும்

கண்டது மட்டுமல்லாது            

வெயிலும் நிழலும்

பட்டை பட்டையாய்

ஆங்காங்கே

மாறி மாறி

இருப்பதையும் வியந்து களித்தாயிற்று.

 

நழுவித் தவழும் மேகங்களை

தடுத்து நிறுத்தி குளிர்வித்து

தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு மட்டும்

கூடுதல் மழையை பெற்றுத் தந்து இதம் சேர்க்கிறாய்.

  

விடிகாலை காபி உன்னை கண்ணால் பருகிக்கொண்டு,  

மாலை நடை உனது மேற்பார்வையில்,

சமையலும் வீட்டு வேலைகளும் உன்னுடன் பேசிக்கொண்டு

என்று வெகு சீக்கிரம் என் தோழியாகிவிட்டாய்! 


ஒரு நொடி  தூரல், மறு நொடி வெயில்

ஒரு கணம் பேய்க் காற்று, மறு கணம் அடை மழையென

வானிலை அடிக்கடி மாறுவது 

உன்னை நான் வியந்து பார்த்துக்கொண்டே இருக்க

இயற்கை எனக்கு காட்டும் சமிக்கையோ!


இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவை இல்லை!