Showing posts with label Proud Mommy. Show all posts
Showing posts with label Proud Mommy. Show all posts

December 29, 2024

தவப்புதல்வி - My first published book


மகளின் பிறந்த நாளிற்கு மூன்று மாதங்கள் முன்பு, திடீரென்று தோன்றிய எண்ணத்தால், அவளைப் பற்றி, நான் ஏற்கனவே எழுதிய பல குறிப்பு / பதிவுகளை வைத்து ஒரு புத்தகம் எழுதி, பதிப்பித்து பிறந்த நாள் பரிசாக கொடுக்கலாம்  என்று தோன்றியது. உடனே களத்தில் இறங்கினேன். சனி, ஞாயிறு மட்டுமே நேரத்தை செலவிட முடியும் என்கிற சூழல். ஆனால் அப்படி  கிடைத்த நேரத்தில், பலமணி நேரம் தொடர்ந்து எழுதினேன். 60% content ஏற்கனவே இருந்தாலும், அதையும் திருத்த, மொழி பெயர்க்க, arrange செய்ய என்று பல எழுத வேண்டியிருந்தது. 40% புதிதாய் எழுதவும் வேண்டியிருந்தது. 

என் தோழி அலமேலு சென்னையிலிருந்து proofreading -இல் மிகுந்த உதவி செய்தாள். பல முறை பகுதி பகுதியாகவும், முழுமையாகவும் draft -ஐ அனுப்பியும், அவ்வப்போதே திருத்தி அனுப்பினாள். புத்தகத்தில் எழுதப்  பல யோசனைகளையும் கொடுத்தாள். புத்தகம் பிரிண்ட் -க்கு அனுப்பும் வரை பக்க பலமாக இருந்தாள். என் மற்றொரு தோழி, குடும்ப நண்பர், சித்தா டாக்டர் நிகிலா, நான் கேட்டதும், மிகுந்த நேரமின்மை சூழ்நிலையிலும், அணிந்துரை எழுதிக் கொடுத்தார். நான் புத்தகம் எழுதுவதைப் பற்றி மிகவும் மகிழ்ந்தார். 

எழுதுவது, திருத்துவது, அட்டைப் பட வடிவமைப்பு இப்படி busy -யாக இருந்ததால், இதை முடித்து printing process -ஐ explore செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அப்படி நான் செய்திருந்தால் நேரம் இல்லாமல் போயிருக்கும். மகளின் பிறந்த நாளின் போது, புத்தகம் கையில் கிடைத்திருக்குமா என்று தெரியாது. என் அண்ணன், ஆன்மிக எழுத்தாளர் - மொழிப் பெயர்ப்பாளர் பிரசாத், அவர் வழக்கமாகப் பதிப்பிக்கும் பதிப்பகத்தை அறிமுகம் செய்ததால், உடனே வேலை நடந்தது.     

Self publishing என்று கூட சொல்ல முடியாது. Self printing என்றுதான் சொல்ல வேண்டும். முன்பக்க, பின்பக்க அட்டைகளை நானே Canva -வில் design செய்தேன். பின்பக்க அட்டையில் என் புகைப்படம் (எழுத்தாளர் -ன்னா சும்மாவா!), புத்தகத்தைப் பற்றிய சிறு synopsis, அணிந்துரை, எனது நன்றி என்று ஒரு proper எழுத்தாளரின் புத்தகத்தைப் போல பதிப்பித்தேன். விற்பனைக்காக அல்ல. ஜஸ்ட் ஒரு ஆத்ம திருப்திக்காக எழுதியது இது. மொத்தமாகவே 20 புத்தகங்கள்தான் பதிப்பித்தேன்.

"தவப்புதல்வி" என்ற தலைப்பு, என் கணவரின் பரிந்துரை. எனது விருப்பத்தில் இருந்த மற்ற புத்தக தலைப்புகள் - மனம் நிறை மகள், சுதாவின் சுந்தரி, மகளோசை, மகளதிகாரம். நண்பர்கள் - உறவினர்களுக்கு இந்த தலைப்புகளை poll வைத்து அவர்களின் விருப்பதைக் கேட்டு, முடிவு செய்தேன்.

உறவினர்கள், சில நண்பர்கள் என்று எங்கள் கூட இருந்தவர்கள்தான் இந்த புத்தகத்தை relate செய்து கொள்ள முடியும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் பிறகு புரிந்தது எல்லா அம்மாவும் இந்த புத்தகத்தோடு relate செய்து கொள்ள முடியும். யார் படித்தாலும், அவர் தங்கள் குழந்தையின் மழலை நினைவுகளை மறுபடி நினைவு படுத்திக் கொள்ள முடியும். ஏனென்றால் எல்லா குழந்தைகளும்,  தாய்மை உணர்வும் ஒன்றுதான்.  

புத்தகம் படித்து, எனக்கு ஃபோனில் அதைப் பற்றி சிலாகித்து பேசிய அனைவரும் என்னை மகிழ்வித்தார்கள். சிலர் வாட்ஸாப் மெஸேஜ்' ஆக தன் கருத்தை அனுப்பியிருந்தார்கள். எல்லாமும் மிகவும் மகிழ்வாகவே இருந்தது. ஓரிரு எதிர்மறை கருத்தும் வந்திருந்ததுதான். 

புத்தகம் கைக்கு வந்த பிறகு, சில நிகழ்வுகள் எழுத மறந்தது நினைவுக்கு வந்துது. மகளும், உறவினர்களும் கூட சிலவற்றை நினைவு படுத்தினார்கள். இப்படி பல நிகழ்வுகள் விடுபட்டு விட்டது.  

எல்லோரும் என்னிடம் கேட்டது, "மகள் படித்து என்ன சொன்னாள்?" என்பதுதான். மகள் அந்தந்த content -ற்கு ஏற்ற மாதிரி ரசித்தாள், சிரித்தாள், அவளைப் பற்றி சிலவற்றை முதல்முறை தெரிந்து கொண்டதால்  ஆச்சர்யப்பட்டாள், "என்னை கிண்டல் செய்யறியா?" என்று என்மேல் விளையாட்டாக கோபித்தாள். இப்படி நவரசங்களையும் காண்பித்தாள். ஆனால் "என்னை எவ்வளவு திட்டியிருக்க... அதப்பத்தி ஒண்ணுமே எழுதலியே" என்றாள். "ம்க்கும். நீ என்னை பத்தி புத்தகம் எழுதும்போது, அதுல எழுதிக்கோ" என்றேன். வேற என்ன சொல்லி சமாளிக்கறது சொல்லுங்க?! 

Last, but not the least, என் முதல் தோழி & என் கசின் அனிதா ஒரு கவிதையாக தன் கருத்தை எழுதித் தந்தாள். ஒவ்வொரு வார்த்தையும் exaggeration தான். ஆனாலும் இது எனக்கு மிகவும் ஸ்பெஷல்.


தவப்புதல்வி! 

---------------------

தவமிருந்து நான் பெற்ற படைப்பு!

வாசித்தேன்! மெய் மறந்தேன்!!


(சுதா) உன் தாயன்பில் என் உள்ளம் கரைந்தேன்!

தமிழின் இனிமை! தாய் பாசத்தின் பெருமை!

கண்டேன்! வியந்தேன்!!


கருவாகி உருவாகி உயிராகி 

வளர்ந்த உறவு!


உன் கனவுகள் உயிர் பெற்ற கதை!

உன் உணர்வுகள் உருப் பெற்ற நிலை!


நீ தாயுணர்வின் சிற்பி!

தமிழ்த் தாயின் தவப்புதல்வி!


எண்ணங்களை இயல்பான எழுத்துக்களாய்த் தந்த வித்தகி!

தாயன்பின் எடுத்துக் காட்டு!

அம்மா என்ற வார்த்தையின் உண்மை அர்த்தம்!


தாய்மையை அணு அணுவாய் ரசித்த ரசிகை!

தாய்மையின் மதிப்பை மற்றவர்க்கு உணர்த்திய தாரகை!        

*****

கண்மணி மானு!

----------------------------

என்னே உன் நுண்ணறிவு!

'தாயைப் போல பிள்ளை

நூலைப் போல சேலை'


வளரும் விஞ்ஞானி, மலரும் மேதாவி!

பேசும் சித்திரம், புதையலில் புதையலில் கிடைத்த ரத்தினம்!


தாய் சேய் அன்பு உரையாடல்கள்

காலத்தினால் அழியாத கல்வெட்டுகள்!


'அப்பனுக்கு பாடம் சொன்னான் சுப்பன்'

கேள்விக்கு கணைகளால் தாயை திணரச் செய்த சேய்!


அன்பு, அறிவு, அழகு 

ஒன்றாய் சேர்ந்த இறைவி நீ!


வாழ்க உங்கள் அன்பு! 

வளர்க உங்கள் உறவு!!            


- அனிதா          

March 9, 2018

ஓவர் எமோஷன் ஒடம்புக்காகாது, மகளே!






சில காரணங்களால், என் மீது மிகுந்த கோபத்திலிருந்தாள் மகள். அவள் அழுகை, கோபம் என்று உணர்ச்சி வசப்பட்டதினால், என்னுடைய ஒரு schedule ரத்தானது.

I cancelled my plan, because of her emotional state. I was cool with it. So no regrets.

ஆனால் நான் எவ்வளவு சொல்லியும் அவள் சமாதானம் ஆன பாடில்லை. சில நிமிடங்களில் நான் அவளுக்கு கதை படிக்கும் நேரம் ஆனதால், அதற்கு அழைத்தேன். கோவமாக இருந்த அவள், ஓரிரு நொடிகளில், ஓவென அழுது என்னை கெட்டியாக கட்டிக்கொண்டு அழுதாள். "நா உன்னை உன் பிளான கான்செல் செய்ய வெச்சேன். ஆனா உடனே நீ எனக்கு கதை படிக்கட்டுமான்னு கேக்குறியே. எம்மேல கோவம் இல்லியா உனக்கு? என்னை அவ்வளவு பிடிக்குமா உனக்கு?" ன்னு ஒரே அழுகை. இந்த அழுகைய சமாதானம் செய்யப் போக, நானும் அழுததுதான் நடந்தது.

இது நடந்து சில நாட்கள் ஆனாலும், கிட்டத்தட்ட தினமும், ஏதோ ஒரு ஓரிகாமி செஞ்சி, அதுல "சாரி, ஐ லவ் யூ"ன்னு எழுதி தர்றா.

ஓவர் எமோஷன் ஒடம்புக்காகாது, மகளே. #மகளதிகாரம்

November 14, 2017

அன்பு மகளே!


கைகளை கட்டிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு கோபப்படுவதில்லை.
நீ வளர்கிறாய்.

தரையில் படுத்து புரண்டு அடம் பிடிப்பதில்லை.
நீ வளர்கிறாய்.

முடி வெட்ட அழகு நிலையம் செல்வதில்லை.
நீ வளர்கிறாய்.

என்னை இன்னொருவருடன் பேச விடுகிறாய்.
நீ வளர்கிறாய்.

கண்டித்தால் அழாமல் பதில் பேசுகிறாய்.
நீ வளர்கிறாய்.

உன் பொருட்களை பத்திரமாய் எடுத்து வைக்கிறாய்.
நீ வளர்கிறாய்.

எனக்கு முடியாதபோது ஓய்வு கொடுக்கிறாய்.
நீ வளர்கிறாய்.

பிறர் மனது நோகாதவாறு பேச முயற்சி செய்கிறாய்.
நீ வளர்கிறாய்.

ஆசை பட்டாலும் அடம் பிடிப்பதில்லை பெரும்பாலும்.
நீ வளர்கிறாய்.


புகைப்படத்திற்கு pose செய்ய நாட்டமில்லை. அந்த தருணத்தை 'வாழ' விரும்புகிறாய். 
இதை விடுத்து வளறாதே!

கோபப்பட்டாலும் நிமிடங்களில் தெளிவடைகிறாய்.
இதை விடுத்து வளறாதே!

அழுகையே இருந்தாலும் அழுது தீர்த்து தெளிந்து விடுகிறாய்.
இதை விடுத்து வளறாதே.

எல்லாரையும் நேசிக்கிறாய்.
இதை விடுத்து வளறாதே.


சிறு சிறு விடயத்திற்கும் அகம்/முகம் மலர மகிழ்கிறாய்.
இதை மட்டும் விடுத்து வளர்ந்து விடாதே! 


மகிழ்ச்சியை சில சமயம் மற்றவரிடத்தில் தேடுகிறாய்.
கட்டாயம் இதை மட்டும் விடுத்து வளர்ந்து விடு!!   


September 12, 2016

Special Birthday!


Manasa started planning for my BD a month before itself. She kept saying “Amma, you should enjoy the rest day on your BD. I will do all the works and you just have to have the fun.”  J

Since a week, she used to ask me naughtily almost daily “Amma, what special day is coming in 5 days…4 days etc”. Thus she started the countdown, a week before. J

She gave a to-do list to her dad, to buy for my BD. A saree (she says she likes me in saree only), a salwar (coz I told her that it’s my choice), a chain and an ear-ring. The last two are still pending and I think I need to follow-it-up with Manasa. ;-)

Last night she wrote a surprise greeting letter and kept it under my pillow, without my knowledge. To my “surprise”, I saw it only in the morning.

She fulfilled her promise too up to an extent that she could do, like re-arranging her toys after playing, swept & mopped wherever it was dusty & dirty on the floor.

Already asked her dad to come home early to go out for dinner.

I should have kept counting from the morning, to have a clear count on how many times she has wished me HBD. :-)

I have just described the happenings and I am not going to share my emotions here, because obviously I cannot express it in words.


Manasa, thanks a lot my darling. Not only because of these incidents, but generally everyday, you make me feel proud about yourself. Love you lots.

May 9, 2016

Mother's Day


I did not tell my little one yesterday that it was a mother’s day. My MIL called her and told about it. She was surprised to know that. She was asking over the phone “What? Is today Mother’s day?” At the same time, she gestured me if that’s true. I nodded yes. Immediately she was bright. She told over phone “Hold on for a sec aaji… I have an important work. Don’t keep it down. Wait for a min on the line.”

She came near me. Her expression was like “Sorry mom, I didn’t knew it before”. She gave me a hand shake and a tight hug and told “happy mother’s day mma.” I was on the cloud nine already.

Then she ran to the phone and said “I just wished my mom, aaji. Thanks for letting me know.” Suddenly she remembered something and spoke over phone “Aaji, please cut the call. I have another urgent work.” Then she called her dad who was not there at home at that time and informed him about the special day and asked him to immediately call his mom. Then she dialled my mom’s number, informed her about it and then gave the phone to me.

After all this, she gave me a plain paper and asked me to cut the paper in heart shape. But she said “Mom, I just remembered I have a project work from school and this is for that only.” And I did what she asked. After few mins, she gave me this card wishing me again. We moms are used for “Thozha Nagarjuna” type “surprise” expression, right? So I was "surprised" and made her happy in turn.

Life is beautiful !! :-)

October 2, 2015

Niece!

Niece or nephew is one of the most special relations one can ever have. My niece is also very special to me. She is Sahana. She is an “arundha vaalu” when she plays with my daughter. Otherwise she is so matured. You cannot see her get surprised. Funny thing is you do whatever to surprise her, but you can still see her just calm and express in one word “its good”.

She is so intelligent, very accommodative, very adjustable in nature etc etc. I can bet no children of her age can be so co-operative to their parents. Very disciplined brought up.   

Here are few funny incidents I remember about her when she was just 5 years old. She came on a vacation from US when I was 7 months pregnant and she was curious to see the baby inside me. I said “darling, you cannot see the baby as it is inside my tummy.” I guess she got intimidated and immediately responded “Yuckyyy…why did you eat the baby athai?”

When she again came next year for vacation, my baby was 7 months old. I guess she would have thought she can play with the baby like she does with her friends. But she was bored in 10 mins with the baby and she said “athai, give the baby to paatti and come… lets play”.

Again another time when my baby got cold & cough, my niece asked how did the baby catch the cold. I told her may be because of the shampoo bath that I gave her. She got intimidated and asked me “Athai, why did you feed shampoo baath to baby?”

And a couple of years ago, I was telling my niece that I used to write letters in post cards or inland letters to friends and relatives when I was young like her. She innocently asked me “how did you send those letters… with the help of pigeons?”. She made me intimidated this time. I wonder what she thought of my age!

October 13, 2014

Hap... Hap... Happy Birthday


My Ba(by)rbie turns 5 today!

I am glad to share a few words about her on this day.

She is my mom as she says no to even onions, as it makes me cry.
She is my dad as she never enjoys alone which makes me glad, be it eating an ice-cream or watching a song.
She is my fan as she recognizes and admires whatever new I wear, be it a new dress or an ear-ring.
She is my friend as she giggles with me, cracks jokes to make me laugh and shares her lil secrets with me.

(I am sure my husband too has a similar list. But this is just our version, not sure of hers though. :-p)

Maanu, you brought meaning to our life, making every day so interesting and beautiful. We are proud parents indeed.

A very Happy Birthday to you darling!

June 30, 2013

மகளதிகாரங்கள் - 2

These are the tweets that I tweeted about my daughter. Most of them are from real experiences though few of them are decorated with imagination.
  • கலரிங் செய்யும்போது கையோடு சேர்ந்து தலையும் அசையும் என் மகளுக்கு. :-)
  • மானு: அம்மா, ரன்னிங் ரேஸ் விளையாடலாம். நான்: எனக்கு ஓட வராதும்மா. மானு: நீ ஆமை மாதிரி மெள்ள நட, நான் முயல் மாதிரி ஓடுவேன். #Talent2Convince
  • என் நீஸ் சஹானாமகள் மானு ரெண்டுபேருமே chatter பாக்ஸ். என் நீஸ் எதையோ 5 நிமிடமாக சொல்லிக்கொண்டிருக்க, மானு சொல்கிறாள் -என்னை பேசவே விட மாட்டேங்கிறா. :D
  • புது டிரஸ் போட்டுக்கொண்ட மானுவிடம், நெய்பர்: டிரஸ் நல்லா இருக்கு. என்ன விசேஷம்? இவ: எனக்கு வெட்டிங் டே. :-D
  • சாப்பிடல், பல் தேய்த்தல் போன்ற கஷ்டமான விஷயத்தில் ரீசென்ட்டா சேர்ந்தது, மகளை வீட்டுக்கு வர வைத்தல். எந்நேரமும் வெளியே/யார் வீட்டிலாவது.
  • முதல் மரியாதை சிவாஜி மாதிரி, அபார்ட்மெண்டில் ஏதோ ஒரு குழந்தையின் குரல் கேட்டாலும் என் மகளுக்கு ஜெர்க் ஆகும். அடுத்த நொடி வெளியே ஓடிடுவா!
  • தன் பொம்மையை அடுத்த குழந்தையிடமிருந்து திரும்பப் பெற என் மகள் சொல்கிறாள் 'உனக்கு கை வலிக்கும். என்கிட்டே குடுத்துடு'.
  • எம் பொண்ணு 'பே ச்கூல்' (play school) ன்னு தெரியாம உண்மைய சொல்றா!
  • நானும், என் மகளும் ஒரே நிறத்தில் உடையணிந்தால் முன்பெல்லாம் 'same pinch' சொல்பவள், இப்போது 'என் friendடப் போல யாரு மச்சான்'னு பாடுகிறாள்
  • "அம்மா, என்ன பாரு, சிரி"ன்னு என் மகள் சொல்லும்போதே தெரிந்து விடுகிறது, அவள் ஏதோ விஷமம் செய்திருக்கிறாள் என்று. :)
  • "மானு, ஏம்மா உனக்கு மிஸ் கைல 'ஸ்டார்' போட மாட்டேங்கறாங்க" என்றால் "என் கைலதான் மருதாணி இருக்கே. ஸ்டார் போட இடமில்ல" என்கிறாள்.
  • மகள் பல் தேய்த்தபின், பேஸ்ட்டை விழுங்குவதற்குள், ஒரு விரலால் அவள் வாயை வழித்து கீழே போட்டால், 'அம்மா pasteடை ஏன் வேஸ்ட் செய்றே'ங்கிறா.
  • சாமி ரூம் குப்பையாக இருக்குது என்றேன். உடனே மகள் அங்கு சென்று 'சாமி, ஏன் குப்பை போட்ட? உன் ரூம சுத்தமா வச்சிக்க தெரியாதா' என்கிறாள்.
  • Spread Cheeseஐ விரலால் எடுத்து மகளுக்கு ஊட்டினேன். அதை சாப்பிட்டு 'அம்மா, cheeseம் நல்லா இருக்கு, உன் விரலும் நல்லா இருக்கு' என்கிறாள். :)
  • 'சஹானா சாரல் தூவுதோ' பாடலை பாடவிடாமல் 'ஜனனி ஜனனி' பாட சொல்கிறாள். காரணம் சஹானா என் niece.
  • 'மானு, பால் ஆறிட்டா நல்லா இருக்காது, குடி'. சிறிது கழித்து 'பால் ஆறிடுச்சு, குடிம்மா'. மானு:ஆறிட்டா நல்லா இருக்காதுன்னுட்டு குடிக்கசொல்றே?
  • என் மகள் 'பாபா ப்ளாக்ஷீப்'பும், 'எபிசிடி'யும் கலந்து கட்டி பாடும்வரை நிஜமாகவே நான் உணரவில்லை இரண்டும் ஒரே மெட்டு என்று.
  • பேப்பர் கப்பல் செய்தால் கூட அம்மா கப்பல், அப்பா கப்பல், பாப்பா கப்பல், பாட்டி கப்பல், தாத்தா கப்பல் செய்ய வேண்டும் மானுவுக்கு. :-)
  • மானுவோட ஃப்ரெண்டு, LKG படிக்கற அந்த கேஷவ் அண்ணாவ பார்த்தே ஆகணும் நான். எல்லா புது பாட்டையும் கத்துகொடுத்துடறான் இவளுக்கு
  • பொரி உருண்டை சாப்பிடக் கொடுத்தால், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'ங்கிறா பொண்ணு. இதெல்லாம் எங்கே கேள்விப்ப்படுறான்னே தெரியல. :-)
  • நான் மானுவை அதட்டும்போதேல்லாம் 'அம்மா, நீ யார் ஃப்ரெண்டு?'. 'உன் ஃப்ரெண்டுதான்.' 'அப்போ ஏன் திட்டுறே?'. கோவம் போய் புன்னகை நிச்சயம். :-)
  • உன் ஃப்ரெண்ட்ஸ் பேர் சொல்லுன்னதும் நிரஞ்சன், கோகுல், சதீஷ்ன்னு சொல்லும்போதே அவர் 'என்னடி ஒரு பொண்ணுபேர் கூட சொல்லமாட்டறா' என்கிறார்
  • பாசமாக விளையாட கூப்பிட்டு, பட்டு பட்டுன்னு (சில சமயம்) அடிக்கறா என் பொண்ணு பக்கத்து வீட்டு குழந்தையை. :-(
  • ஒரு பறவையை பார்த்து கேட்கிறாள் 'அது ஏன் கோபமாக இருக்கிறது' என்று. நான் 'அது angry bird, அப்படித்தான் இருக்கும்'. என்ன புரிந்ததோ பாவம்.
  • குரு பிரம்மா குரு விஷ்ணு ..... சப்பச்சி குருவே நமக - என் மகள் மழலையில்!!
  • அம்மா, யாரு நான் தூங்கும்போது முகத்துல கொசு வெச்சதுன்னு கேக்கறா மானு. பாவம் குழந்தைகள். கொசுக்கள்! டவுன்! டவுன்!
  • அம்மா, cowக்கு இங்கிலிஷ்ல domestic animal ம்மா - என் மகள்!
  • என் பொண்ணு பாடுறா "என் ப்ரெண்ட நிரஞ்சன் போல யாரு மச்சான்". ;-)
  • "மானு, உன்னப் பத்தி த்விட்டர்ல சொல்லிருக்கேம்மா" என்றேன். "ஏம்மா என்ன பத்தி திட்டுற?" என்கிறாள். :)
  • சில்லுன்னு இருக்கேன்னு வீட்டுல செருப்பு போட்டா, விட மாட்டேன்கிறா மகள். வீட்டுல செருப்பு போடக் கூடாதுன்னு நீதானமா சொன்னே என்கிறாள்.
  • என் மகளுக்கு இட்லியைவிட இட்லிப்பொடிதான் பிடிக்குது. இட்லிப் பொடிலையே இட்லி பண்ணிக் கொடுத்துட்டா என்னன்னு யோசிக்கறேன். #TerrorMom
  • மானுவின் பாஷையில் சறுக்கு மரத்திற்கு டொய்ங், ஊஞ்சலுக்கு ஜொய்ங். :)
  • நான்: பாரதியார் பாடின பாட்டு எது? மானு: ஓடி ஓடி விளையாடு (2). // குழந்தைதானே, அதான் confuse ஆயிட்டா. :))
  • 'அம்மா, ஆன்ட்டி மூணுவாட்டி பிஸ்கட் சாப்பிடுன்னு சொன்னானாக, சாப்பிட்டுமா?' என்கிறாள் மானு அந்த ஆன்ட்டிக்கு முன்னாலேயே. :)
  • மானுவின் சமவயது குழந்தைகள் எவரும் 'இரண்டாமிடம்' என்பதை ஒப்புக்கொள்வதில்லை. எனவே நான் சொல்றது-நீயும் ஃபஸ்ட், அவளும் ஃபஸ்ட், அவனும் ஃபஸ்ட்.
  • மானுவின் தோழி 'எனக்கு அந்த பொம்மை கொடுக்கலைன்னா நான் விளையாட வர மாட்டேன்'. உடனே மானு 'சரி, இந்தா'. #WhatATechnic
  • நானும் என் மகளைப் போல் முதுக்கு (முறுக்கு) என்று சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டேங்கிறாள். சரியா முதுக்குன்னு சொல்லும்மா என்கிறாள் :-)
  • காலி பாத்திரம் ஒரு அக்ஷயப் பாத்திரம். இல்லாத மம்மு அதிலிருந்து வந்துக் கொண்டே இருக்கும் என் மகளுக்கு. :)
  • 'அம்மா, எங்க டீச்சரும் குப்பைக்கார அங்கிள் மாதிரியே விசில் வெச்சிருக்காங்க' என்கிறாள் மகள்.
  • ரோட்டில் வரும் சோன்பப்படிக்காரனின் பெல்லின் சத்தம் மகளுக்கு கேக்காதவாறு அவளை வேறெதிலாவது engage செய்வது எங்கள் வீட்டில் நல்ல காமெடி.
  • எம் பொண்ணு ஒருமுறை என்னிடம் 'அம்மா, எனக்கு 5 அம்மா வேணும்'னா. நான் நெனச்சேன் 'நல்ல வேளை, அவ அப்பா இதை கேக்கல'ன்னு.
  • என் மகள் 'ஒருவர் தனக்கு ரொம்ப பிடிக்கும்' என்பதை விரல் விட்டு எண்ணி 5, 10 இவ்வளவு பிடிக்கும் என 'வித்யாசமாய்' சொல்வாள்.#போன கீச்சின் key
  • மாதுளம்பழ ஒரு முத்தைக்கூட மூன்று முறை கடித்து சாப்பிட என் மகளால் மட்டும்தான் முடியும்.
  • மூணரை வயதில் மொபைலில் சிட்டி ப்ளாக்ஸ் விளையாடுகிறாள் மகள். # கலிகாலம்
  • மூக்கி மூக்கி, மூக்கு மூக்கு பியர்ஸ் விளம்பரம் முழுசா நடிச்சி காட்டுரா மானு, அவ கசின் சொல்லிக்கொடுத்து. :-)
  • பார்வதி நல்ல புத்தி வரட்டும்னு பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தார்ன்னு நான் சொல்ல 'அப்போ அவருக்கு புத்தி இருக்கலையா' என்கிறாள் மகள். அவ்வ்
  • ரொம்ப சீரியஸா மானு சொல்லுவா 'அம்மா, ப்ளிஸ், எனக்கு சாப்பிடாம இருக்கணும்போல ஆசையா இருக்கும்மா'.
  • 'மானு, ஸ்வீட் சாப்பிடலாமா?'. 'வேணாம்மா, உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம்'. #அவ்வ்
  • தமிழையும், தாய் மொழியையும் கலந்து, ஏற்கனவே உள்ள மழழையில் குழைத்து பேசும் என் மானுவின் மொழி மிக அழகு.
  • சமான் லிஸ்ட் எழுத நோட்டும், பேனாவும் எடுத்தா, என் மகள் 'ஏனம்மா சொல்லிக் கொடுக்கப் போறே?' என்கிறாள். ரொம்ப படுத்தறேனோ அவளை? அவ்வ்.
  • புது பேனா வாங்கினா நம்ம பேர் எழுதி பார்க்கிறமாதிரிதான் புது மொபைல் வாங்கினதும் நம்ம குழந்தைய போட்டோ எடுக்கறது.
  • பலூன் ஊதுவதை பார்க்கும்போது பயந்து காது மூடிக்கொள்வாள். அது உடைந்தாலும் பயம், அழுவாள். ஆனால் ஊதிய பலூன்னா ரொம்ப பிடிக்கும். #மகள்
  • என் மகள் அவளின் சகவயது தோழிகளை வா/போ என்றும், தோழர்களை டா சொல்லியும்தான் அழைக்கிறாள். #பெண்குழந்தையாதிக்கம்
  • இரண்டு கைகளாலும் என் தலைமுடியை படிய வாரி, இருக்கும் பொட்டையே இன்னும் சரியாக வைத்து - என்னுடைய பியூட்டிஷியன் என் மகள்.#Bliss
  • வீட்டை பெயிண்ட் அடிக்கலாம்னு நினைக்கும்போது, சுவற்றில் எல்லாம் ஸ்கெட்ச் பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறாள் மகள்.
  • நான்:சின்ன வயசுல நான் சாக்லேட் கேட்டா, பல்லு போய்டும்னு பாட்டி சொல்வாங்க.நானும் சரின்னுடுவேன். மானு:அப்போ ஐஸ் கேட்க வேண்டியதுதானேம்மா?
  • உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்னு கேட்டா, என் மக வித்தியாசமா ஒண்ணு ரெண்டுன்னு விரல்களை எண்ணி ஃபைவ்/சிக்ஸ் பிடிக்கும்னு சொல்வாள். :-)
  • மகளின் பள்ளியில் ஃபோட்டோ செஷன். நான்:மிஸ் கிட்ட 'எப்போ போட்டோ தருவீங்கன்னு' கேளு. மகள்:இங்கிலீஷ்ல அத எப்படிம்மா சொல்லணும்?#OnlyEnglis.
  • "அம்மா,என்னோட கனவுல பூதம் வந்தா,கண்ணை மூடிகிட்டே உன்னை எழுப்பறேன்.நீ என் கனவுல வந்து அதை அடிச்சிடறீயா" - மகள். ஆஹா!!
  • 'ராவணனுக்கு பத்து தலைன்னா, ஒண்ணு ரியல், மத்தது மாஸ்க் தானேம்மா' என்கிறாள் மகள். :-))
  • "கையில தடவுன ஓடோமாஸ, கொசு சாப்பிட்டு, என் கையிலயே வாமிட் பண்ணிடுச்சுன்னா? உவ்வேக்" என்கிறாள் மகள். :-))
  • குல்லா போட்டுக்கோன்னு நெய்பர் சொன்னதும், 'அது குல்லா இல்ல, காஃப்' என்கிறாள் மகள் #ஸ்கார்ஃப்
  • பாட்டு பாடும்மான்னா சுமாரா பாடுவா. பாட்டு மாதிரி பாடுன்னா நல்லா ராகமா பாடுவா #மகள் ;-))
  • 'ஜானு, ஸ்வீட் பொட்டேட்டோ சாப்பிடும்மா'. டேஸ்ட் பார்த்துட்டு 'பொட்டேட்டோவை ஏம்மா ஸ்வீட்டா செஞ்சிருக்கே, எப்போதும்போல காரமா செய்'ங்றா. :-)
  • ஃபோன் பேசிட்டு வெக்கும்போது ஏம்மா பை சொல்றே? அவங்க வெளிய போகப் போறாங்களா? வெச்சிடறேன்னு சொல்லு #மகள் #அதானே :-)
  • வீட்டு சுவற்றில் இருக்கும் air crackஐப் பார்த்து, 'நம்ம வீட்டுக்கு நரசிம்மர் வந்துட்டு போய்ட்டாரா?' என்கிறாள் மகள்.
  • நேற்று டிவியில் ஹிரண்யகசிபு கடவுளைப் பார்த்து ரெண்டுகையும் மேலே நீட்டி பெரிய்ய வரத்தை கேட்கிறான். என் மகள் 'சாமிய தூக்கிகோன்னு சொல்றாராம்மா'ன்னு கேக்கறா. 
  • பொறுமையாக மகளுக்கு 'புரிஞ்சுக்கோம்மா, எனக்கு வேலை இருக்கு, நீயே விளையாடிக்கோ'ன்னா, சீரியஸ்சாக 'புரியுதும்மா, இப்போ என்னோட விளையாடு'. ;-)
  • நாம் சிறிது முகம் வாடி இருந்தாலும், நம் கன்னத்தை தன் பிஞ்சுக் கைகளில் தாங்கி என்னம்மா ஆச்சுன்னு வாஞ்சையுடன் விசாரிக்கும் மழலைகள் வரம். :-)
  • 'எனக்கு தலை வலிக்குது, படுத்தாம சாப்டுர்ரியா' என்றால், வாய்ப்பை தவற விடாமல் 'ம்ம்ம், இன்னிக்கு எனக்கு சாப்பாடு வேணாம், நீ ரெஸ்ட் எடு'ங்றா.

மகளதிகாரங்கள் - 1



      These are the tweets that I tweeted about my daughter. Most of them are from real experiences though few of them are decorated with imagination.
      • 'அப்பா, நானே உனக்கு வொய்ப்பா (wife) இருக்கிறேன். அம்மா, வேணாம்பா' என்கிறாள் மானு. :) #Pocessive
      • 'அம்மா, அது கருப்பு cow தான், buffalo கிடையாது. எனக்கு தப்பு தப்பா சொல்லித் தராதே' - என் மகள். :)
      • மானு ரொம்ப அமைதியானவள் - தூங்கும்போது. ;)
      • மானு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு, தான் நகங்களை பார்த்தபடி எல்லோருக்கும் உள்ளங்கையை காட்டுகிறாள். #மழலை
      • குழந்தை வளர்ப்பில் தலைசிறந்தவர் யாரவது இருக்கிறார்களா - மானுவை சிறந்த முறையில் வளர்க்க டிப்ஸ் தேவை எனக்கும், என் அம்மாவுக்கும். #புரிந்ததா?
      • வெறும் கையை கொடுத்து சாக்லேட் சாப்பிடு என்றாள் மகள். சரின்னு சாபிட்டா, 'அச்சோ, பேப்பர் பிரிக்காமே சாப்பிட்றியே' என்கிறாள். #இன்றைய பல்பு
      • நான் airplane வரைந்து, என் மகளிடம் இது என்ன என்றால் fish என்கிறாள். #இன்றைய பல்பு
      • 'மானு, சாபிடலன்னா பூச்சாண்டி வந்துடும். ஒழுங்கா சாப்புடு.' - நான். 'அம்மா, நா சாபிடல, பூச்சாண்டிய காட்றியா ப்ளிஸ்' - மானு #பல்பு
      • 'திரும்ப திரும்ப விளையாடுற நீ (2)' என்று மானுவை பார்த்துதான் சொல்லவேண்டும். விளையாடினதையே மறுபடி (2) விளையாடச்சொல்லி...#முடியலே :)
      • வெச்சா குடுமி கதைதான் மானுவிடம். ஒன்று தண்ணியே குடிக்கமாட்டாள், அல்லது அரை பாட்டில் குடிப்பாள் அதுவும் சரியாக சாப்பாட்டிற்கு முன் :)
      • எதிர் வீட்டில் இருப்பவர் டீச்சர் என்றால் மானு நம்பமாட்டாள். போம்மா, அவங்க ஆண்ட்டிதான் என்பாள். அவரே இதை கேட்டு சிரிப்பார். :)
      • குழந்தையின் எந்த வேலையிலும் தலையிடாத அவரைப்பார்த்து மானு கேட்கிறாள் "அப்பா, உனக்கு fridge தொறக்க வருமாப்பா" :)
      • இன்று மானு சொன்னது - அம்மா, எனக்கு கருப்பு பூனை பிடிக்காதும்மா, வெள்ளை பூனைதான் பிடிக்கும். :( # பிஞ்சுக்குள் நஞ்சு
      • என் மாமியார் 'நான் வீட்டுக்கு வரட்டுமா' என்று மானுவிடம் ஃபோனில் கேட்டார். அவள் என்னை பார்த்து 'பாட்டி நம்ம வீட்டுக்கு வரட்டுமாம்மா' கேட்கிறாள். #அவ்வ்
      • என் இறந்து போன தந்தைக்கு என் மகள் விளையாட்டுக்கு போன் செய்து, 'ஏன் தாத்தா அம்மாவை விட்டுட்டு போயிட்டே? அம்மா பாவம் இல்லையா' என்கிறாள்
      • 'அம்மா, நான் நல்லா சாப்பிடுவேன். அப்போதான் பலசாலி ஆக முடியும்' - மானு. // பேசும்போது நல்லா வக்கணையா பேசு. எழும்போது கோட்ட விட்டுடு.
      • மானுதான் உண்மையான கீச்சர். மெதுவா பேசணும்னு எவ்ளோ சொன்னாலும் கீச்சு கீசுன்னு கத்தி கத்தி பேசுறா. :)
      • என் மகளுக்கு என்ன கதை சொன்னாலும், அவள் கண்கள் விரித்து கேட்கும் விதமே தெரிகிறது, அதை மனதில் காட்சிகளாக்கி பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று
      • Straight line என்று வரைந்து காட்டினால், ’அம்மா, lion இப்படி இருக்காது’ என்று தன் கதை புக்கிலிருந்து சிங்கம் காட்டுகிறாள் என் மகள்.
      • நான் இனிமே எதிர்வீட்டு குழந்தைக்கு பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்னு இருக்கேன். அப்போதான் எம்பொண்ணு அதுகூட விளையாடுவா. :D
      • பல்தேச்சி பல்தேச்சி காபி குடி'ன்னு பாடுறா என்பொண்ணு #பர்தேசி பர்தேசி ஜானா நஹின்.
      • மானுவின் அத்தை விஜிக்கு இன்னொரு பேர் விஜயஸ்ரீ என்றேன். இன்னொரு நாள் அனுமாருக்கு வேற பேர் என்னன்னு கேட்டதுக்கு, மகள் அனுமஸ்ரீ என்கிறாள். #PresenceOfMind
      • எங்கள் வீட்டு வாசலில் எப்போதும் இரு கோலங்கள். ஒன்று கொஞ்சம் தெளிவாக, இன்னொன்று ரொம்ப அழகாக (என் மகள் போடுவது).
      • மகள் திறக்கக்கூடதுன்னு வாஷ் பேசின் குழாயை கீழே மூடிவிட்டு, ஏதோ நினைவில் மேல் குழாயை திருகினால், அவ சொல்றா - அம்மா, கீழே மூடிருக்கும்மா.
      • குழாய் வாமிட் பண்ணுது, அந்த தண்ணிய ஏம்மா எம்மேல ஊத்தரே என்கிறாள் மகள் அவளை குளிப்பாட்டுகையில். :)
      • எங்க கல்யாண நாளின் போது எவ்வளவு முறை நான் 'எனக்கும் அப்பாவுக்கும் கல்யாண நாள்'ன்னு சொன்னாலும், ஒவ்வொரு முறையும் 'அப்படி இல்லைம்மா, எனக்கு, உனக்கு, அப்பாவுக்கு கல்யாண நாள்ன்னு சொல்லு'ன்னு சொல்லிட்டே இருந்தாள் ;-) #Pocessive
      • சாப்பிடாமல் படுத்திய சமயத்தில், மகளுக்கு புரியாத கன்னடத்தில் அவரிடம், 'நீ சாப்பிட்டு முடிச்சாதான் பேசுவேன்'ன்னு சொல்லுங்கன்னேன். ஆனா அவர் சொல்லலை. ஓரிரு நொடிகள் கழித்து இவள் 'அம்மா, அப்பா ஒண்ணுமே என்கிட்டே சொல்லலேம்மா'ங்கிறா. #வேறெந்த மொழியில பேசணும்னு தெரியல எங்களுக்கு.
      • என் பொண்ணுக்கு ஹாப்பி வாலன்டைன் டேன்னு சொன்னா, ஹாப்பி பர்த் டேன்னு சொல்லும்மா. எனக்கு அதுதான் பிடிக்கும்ங்கறா.
      • பள்ளியில் சொல்லிக்கொடுத்த மெடிட்டேஷனை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாள். நன்றாக கண்ணைமூடினால், 'அப்படி இல்லைம்மா, லைட்டா ஒரு கண்ணை திறந்து பார்க்கலாம், நாங்கெல்லாம் அப்படிதான் செய்வோம்'ங்கிறா. அவ்வ்
      • என் சாதாரண ஜுரத்திற்கும் உடனே டாக்டரைப் பார்க்க வைக்கிறாள் மகள். இல்லாத என் அப்பாக்கு போன் செய்து 'தாத்தா, உங்க பொண்ண கூட்டிட்டு போங்க'.
      • சுழல் நாற்காலியில் விளையாடும் மகளிடம் ஒரு வாய் சாப்டுட்டு சுத்துன்னு சொன்னா, 'இரும்மா, கணேஷா மாதிரி மூணுதடவ சுத்திட்டு அப்புறம்'ங்கிறா.
      • 'டேபுள் மேல ஏறி விழுந்து மண்டைய ஒடெச்சுக்காதடி' ன்னு மகளுக்கு சொன்னா, அவ 'அப்ப, கணேஷா மாதிரி எலிஃபண்ட் தலைய எனக்கு வெச்சிடு' என்கிறாள்.
      • எங்கள் நெய்பர்'ருக்கும், என் அண்ணனுக்கும் ஒரே பேர் என்பதால், என் மகள் பிரசாத் அங்கிள், பிரசாத் மாமான்னு தெளிவா கூப்பிடுறா.

      • மானுவுக்கு எதையாவது சாப்பிடக் கொடுத்து எப்படி இருக்குன்னு கேட்டா 'பிடிக்கல'ன்னு சொல்லாம, 'நல்லா இருக்கு, எனக்கு போதும்'ன்னு சொல்லுவா.
      • மானுவின் பொருளை யாராவது கேட்டால், 'கொடுக்க மாட்டேன்'னு சொல்லாமல் 'புதுசு வாங்கித்தரேன்' என்பாள். :D
      • அபார்ட்மெண்ட்டில் ஒரு புதிய சிறுமி என் மகளின் பெயரை கேட்டாள். மானு பதில் சொன்னாள். அச்சிறுமி சொன்னது 'அப்ப நீ கேர்ல்லா?' #சம்மர்-கட்
      • நான் 'சின்ன வயசில் எங்க டீச்சர் பெரிய கொம்பால அடிப்பாங்க'ன்னு என் பொண்ணுகிட்ட சொன்னா, எங்க மிஸ்ஸு ஸ்கேல்லாலதாம்பா அடிப்பாங்கங்கிறா. அவ்வ்
      • ஒரு van'ன் பின்பக்கம் எரியும் சிகப்பு விளக்குகளை பார்த்து என் மகள் கேட்கிறாள் 'ஏம்மா அந்த van கோவமா பார்க்குது?' எப்படி தோணுதோ அவளுக்கு?
      • சடி, பரியது, சருப்பு - ஒற்றைக் கொம்பு வார்த்தைகள் உச்சரிக்க வராத என் மகளுடைய மழலை வார்த்தைகள். :-)
      • நான் டீச்சராக இருந்தால், 'மிஸ், சாய் பிஞ்சிங் / கீதா பீட்டிங்'ன்னு என்னை பாடம் எடுக்க விடாமல் யார் மீதோ புகார் கொடுத்துக் கொண்டே இருப்பாள்
      • டீச்சர் விளையாட்டில் என் மகள் ஸ்ட்ரிக்ட் டீச்சர் ஆகி, என்னை மக்கு பிள்ளை ஆக்கிவிடுகிறாள். :)
      • ம்ம், ம்ஹூம், தலையாட்டுதல் போன்றவற்றை communicationனாகவே எடுத்துக்க மாட்டா என் பொண்ணு. எம்மா ம்ம் சொல்ற, என்கிட்டே பேசமாட்டியா என்பாள்.
      • எந்த கதையை சொன்னாலும் மகள் 'அங்கே அழைச்சிட்டு போம்மா'. அது வெறும் ஸ்டோரி'மா என்றால் அந்த ஸ்டோரிக்குதான் அழைச்சிட்டுப் போ என்கிறாள். கதை சொல்லலாம், கதைன்னா என்னன்னு எப்படி சொல்றது.