September 8, 2021

மருதமலை மாமணியே !!

 “காற்றின் மொழி”யை ரசித்து எழுதி விட்டேன்

https://sudhazscribbles.blogspot.com/2021/07/blog-post.html

https://www.vikatan.com/oddities/miscellaneous/love-for-balcony-breeze

"நான் சொல்லும் நேரத்தில் மழை நின்று போகட்டும்" என்று மழையுடனும் உரையாடி விட்டேன்

https://www.vikatan.com/oddities/miscellaneous/conversation-between-woman-and-rain-readers-imagination

இப்போது மலைகளுக்கான நேரம்.



பிரமாண்டமான அடுக்கடுக்கான பர்வதங்களின்

பிரதான மையத்தில் வீற்றிருக்கும்

மருதமலை முருகன் கோவில் ஒரு ஆச்சர்யம்.

விலை மதிப்பில்லாத அரிய கல் பதிந்திருக்கும்

மன்னனின் கிரீடத்தை ஒத்திருக்கும் காட்சி அது.

 

பார்த்தவுடன் மட்டும் அல்ல,

எங்கள் வீட்டு பால்கனியிலிருந்தும்

சன்னல்களிலிருந்தும்

மொட்டை மாடியிலிருந்தும்

தினம் தினம்

பார்க்கப் பார்க்க

இன்னும் இன்னும்

பிடித்துக் கொண்டேதான் போகிறது.

 

மேகங்கள் மூடியும் 

பனி படர்ந்தும்

மழையில் நனைந்தும்

வெயில் பட்டும்

கண்டது மட்டுமல்லாது            

வெயிலும் நிழலும்

பட்டை பட்டையாய்

ஆங்காங்கே

மாறி மாறி

இருப்பதையும் வியந்து களித்தாயிற்று.

 

நழுவித் தவழும் மேகங்களை

தடுத்து நிறுத்தி குளிர்வித்து

தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு மட்டும்

கூடுதல் மழையை பெற்றுத் தந்து இதம் சேர்க்கிறாய்.

  

விடிகாலை காபி உன்னை கண்ணால் பருகிக்கொண்டு,  

மாலை நடை உனது மேற்பார்வையில்,

சமையலும் வீட்டு வேலைகளும் உன்னுடன் பேசிக்கொண்டு

என்று வெகு சீக்கிரம் என் தோழியாகிவிட்டாய்! 


ஒரு நொடி  தூரல், மறு நொடி வெயில்

ஒரு கணம் பேய்க் காற்று, மறு கணம் அடை மழையென

வானிலை அடிக்கடி மாறுவது 

உன்னை நான் வியந்து பார்த்துக்கொண்டே இருக்க

இயற்கை எனக்கு காட்டும் சமிக்கையோ!


இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவை இல்லை!

July 22, 2021

காற்றின் மொழி!


வாயாடி

நாள் கணக்கில்

வேளை தவறாமல்

ஓய்வில்லாமல்

ஊதலடிக்கிறாயே!

உனக்கு வாய் வலிக்கவில்லையா?!


மகள்

விறைப்பான தென்னை மரங்களையே

வீரிய உன் விசையால் அசைத்து விடுகிறாய்.

தென்னை மரங்களும் தளர்ந்து, தன்னை மறந்து

தந்தை தன் மகளிடம் பேசும் குதூகலத்தோடு

தலையை ஆட்டி ஆட்டி உன்னோடு பேசுகிறது.


தோழி

பெண்களின் அடர்ந்த கூந்தலை ஒத்த

இலை கிளைகளையுடைய வேப்ப மரங்களோடு

நீ சேரும்போது

உயிர்த் தோழிகள் இருவர் கலகலப்பாக

பேசி சிரித்து மகிழ்வது போல தோன்றுமெனக்கு.


குறும்பா

ஓயாமல் வீசி மனதை வருடும் உன்னை

உடலால் உணர

சன்னல் கதவுகளைத் திறந்து வைத்தால்,

ஓடியாடி நீ விளையாட

உன் சகாக்கள் தூசு, குப்பைகளுடன்

வந்து விடுகிறாயே!

இது நியாயமா?!

April 24, 2021

Comments received on Vikatan for the short story

The first short story that I wrote is at here - காண்பதெல்லாம் காதலா டி?!

And this was published on Online Vikatan magazine at here - https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-about-mother-daughter-love-my-vikatan

I received some genuine comments from readers, who are unknown to me, they must be Vikatan readers. And I am so surprised and glad that my empathy and imagination with which I wrote the story has touched many souls.

Happyyyyy!